India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 அன்று 365 பேருந்துகளும் இயக்கபடுகிறது.
கலசப்பாக்கத்தில் உள்ள மிருகண்ட நதி அணையின் நீர்மட்டம் தற்பொழுது வினாடிக்கு 255 கன அடியாக உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீரை வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தபாளையம், நல்லான் பிள்ளைபெற்றால், கங்காலமாதேவி, சிறுவள்ளூர், எலத்தூர், வில்வாரணி ஆகிய பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் செங்கம் அடுத்த சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையின் கொள்ளளவு 119 அடியாகும். தற்போது சாத்தனூர் அணையின் நீர் இருப்பு 2083 கன அடியாகவும், 84 அடி உயரத்தை எட்டியுள்ளது. இதனால் சாத்தனூர் அணை தண்ணீரின் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று செய்யாறு, செங்கம், ஆரணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாநகராட்சியாக சற்று முன் அறிவித்தார். மேலும், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், திருவண்ணாமலை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .
திருவண்ணாமலையில் மேற்கு மாவட்ட தமாக செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கம் பகுதியில் நறுமணத் தொழிற்சாலை அமைக்க வேண்டும், திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியே ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வெம்பாக்கம் அடுத்த கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் அவர்களின் 5 வயது மகள் நேற்று காலை கடையில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். அவரது தந்தை அளித்த புகாரில் தூசி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில், திருவண்ணாமலை பகுதியில் புதிய விமான நிலையம் தொடங்க வேண்டும் என மக்களவையில் திருவண்ணாமலை எம்பி சி.என். அண்ணாதுரை வலியுறுத்தினார்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தி.மலை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, திருப்பூர், தென்காசி, கோவை, நீலகிரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.