Tiruvannamalai

News August 15, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

கேரள கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, தர்மபுரி, இராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News August 15, 2024

தேசிய கொடியை ஏற்றிய அமைச்சர்

image

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான எ.வ.வேலு அவர்கள் இன்று இந்திய சுதந்திர திருநாட்டில் 78ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

News August 15, 2024

அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த எம்.எல்.ஏ.

image

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரணி உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினார். பின்னர், தேசிய தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி வணங்கி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

News August 15, 2024

நடிகர் ரோபோ சங்கர் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலில் உள்ள பூசாரிகள் அவருக்கு அண்ணாமலையார் பிரசாதம் வழங்கினர்.

News August 15, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் அவர்கள் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று K. பிரபாகர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News August 15, 2024

மாநகராட்சியின் முதல் ஆணையாளராக பொறுப்பேற்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் புதியதாக அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை மாநகராட்சியின் முதல் ஆணையாளராக எம்.காந்திராஜன் அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சி வளர்ச்சி அடைய முழுமையாக பாடுபடுவேன் என உறுதியளித்தார். அரசு அலுவலர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News August 14, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (14-08-2024) 28 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 14, 2024

தி.மலையில் புகைப்பட கண்காட்சி

image

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக இந்திய தேசப் பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 14, 2024

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!