India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பவுர்ணமி உண்டியல் எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்களில் 338 கிராம் தங்கமும், 1 கிலோ 652 கிராம் வெள்ளியும், 3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 ரூபாய் ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி இன்று (26.09.2024) நடைபெற்று வருகின்றது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கம் அருகே புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கரியமங்கலம், கொட்டகுளம் பகுதிகளிலிருந்து டாட்டா ஏசி வாகன உரிமையாளர்கள் இலவச பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து
15க்கும் மேற்பட்ட டாடா ஏசி பிக்கப் உள்ளிட்ட வாகனங்களுடன் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சுங்கச் சாவடி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 81 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு மனுக்களின் அடிப்படையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பதாகவும் இதில் 90 % மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மனுக்கள் இந்த மாதத்தில் தீர்வு காணப்படும் எனவும் 50,000 சாதி சான்றிதழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடத்தினால், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் போலீசால் FIR பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார். இளம் வயது திருமணங்களை 1098 எண்ணில் புகார் செய்யலாம் என்றும், அதற்கான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. இதற்கு திருவண்ணாமலையில் ஆசிரியர் சங்கம் அக்டோபர் 7ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அளித்து, பள்ளி திறப்பு 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
செங்கம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா். சங்கம் பனை ஓலைப்பட்டியில் 15 வயது சிறுமி பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் செங்கம் மகளிர் போலீசார் 3 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தமிழகத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விருப்பங்களை அக்.10-ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.