India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (03.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
செங்கம் அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் (59) என்பவர் கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து தி-மலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். தி-மலை காவல் துறையினர் அவரை கைது செய்து செங்கம் காவல் துறையிடம் ஒப்படைதனர்.
திருவண்ணாமலை மாநகரம், 36 ஆவது வார்டு, மாரியம்மன் கோவில் 12 ஆவது தெருவில், திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் புதிய காலிமனை வரி, சொத்து வரி விதிப்பு மற்றும் குடிநீர் இணைப்பு (வைப்புத் தொகை) தொடர்பான சிறப்பு முகாம் இன்று (03.10.2024) நடைபெற்றது. இம்முகாமில், அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை மாநகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 182.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தண்ராம்பட்டு 63.2 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக ஆரணி 2.8 மில்லி மீட்டர், கீழ் பென்னாத்தூர் 41.00 மி.மீ, வந்தவாசி 23.00 மி.மீ, திருவண்ணாமலை 15.00 மி.மீ, செங்கம் 26.4 மி.மீ, கலசப்பாக்கம் 11.00 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும். உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரபாகரன் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம் சுதாகர் என்பவரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பல்வேறு காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் இன்று (02.10.2024) இரவு பத்து மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள்
அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100 என்ற தொலைபேசி எண்ணை ஐ டயல் செய்யலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை திமுக பொறியாளர் அணிக்கு வடக்கு, தெற்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் திமுக பொறியாளர் அணி கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மேலும் விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள கழக நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம் என பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் எ.வ.வேலு அவர்கள் தெரிவித்துள்ளார்.
செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கட்ட மடுவு ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா (55),2 ஆண்டுகளுக்கு முன் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமையில் செய்துள்ளார்.சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கூலித் தொழிலாளி மகேந்திராவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
காஞ்சிபுரத்திம் சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் தொழிற்சங்க உரிமைக்காக போராடி வருகின்றனா். அவா்களுக்கு ஆதாரவாக தொழிற்சங்க தலைவா்களும் போராடுகின்றனா்.ஆனால் தமிழக அரசு அவர்களை கைது செய்வதாக கூறி,கைது செய்யும் போக்கை கைவிடக் கோரியும் திருவண்ணாமலையில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Sorry, no posts matched your criteria.