India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலமாக நடைபெறும் திருவண்ணாமலை வட்டார அளவிலான ஆண்களுக்கான தடகளப் போட்டி நேற்று நடைபெற்றது. இதனை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் டாக்டர் எ.வ.வே கம்பன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்து சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்து வந்த தினேஷ்குமார் என்ற நபரை நேற்று சேத்துப்பட்டு போலீசார் கைது செய்து அவனிடமிருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தினேஷை சிறையில் அடைத்தனர்.
அக்ராபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி பேருந்துகள் இன்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு போட்டி போட்டுக் கொண்டு ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டூவிலரில் வந்த ஆரணி இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் மீது பள்ளிப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வேட்டவலம் ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தின் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் ராஜன்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கோணலூர், அண்டபள்ளம், கெங்கம்பட்டு, செல்லங்குப்பம், காட்டு மலையனூர், பொலக்குணம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.கூட்டத்திற்க்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா். மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் ஆகஸ்ட் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் எனவும், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வட்டார வேளாண் விரிவாக்க மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆக்ஸ்ட் 23ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. விவரங்களுக்கு 04175 233381என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. எம்.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 21-ம் தேதி திருவண்ணாமலை வட்ட அளவிலான ஆண்களுக்கான தடகளப் போட்டி நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் பங்கு பெற உள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை குறித்து மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.