Tiruvannamalai

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

தி.மலை மக்களுக்கு தற்காலிக குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு குடிநீர் வரும் உலகளாப்பாடி பிரதான நீரேற்றும் குழாய் வரும் வழியில், தண்டராம்பட்டு அருகில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பாலம் அமைக்கும் இடத்தில் நீரேற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி 09.04.2025 முதல் 14.04.2025 ஆகிய நாட்களுக்கு நடைபெற உள்ளதால், பெறப்படும் குடிநீர் அளவிற்கேற்ப குடிநீர் விநியோகத்தில் மாற்றம் இருக்கும்.

News April 10, 2025

கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே லாரியில் இருந்து கடப்பா கற்கள் சரிந்து விழுந்ததில், தினகரன் (38) என்ற தொழிலாளி உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பழனி (48) உள்ளிட்ட நால்வர் கற்களை இறக்கச் சென்ற போது, சிறுங்கட்டூர் அருகே வேகத்தடையில் லாரி ஏறி இறங்கும்போது, கற்கள் தினகரன் மீது விழுந்தன. இதைத் தொடர்ந்து மோரணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 9, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News April 9, 2025

கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

image

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 9, 2025

திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பொதுமக்கள் கிரிவலம் சுற்ற வருவதால் கோவில் நிர்வாகம் உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12.04.2025 சனிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் முழு நிலவு தொடங்கி 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 06.08 மணிக்கு முழு நிலவு நிறைவு பெறுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த நேரங்களில் கிரிவலம் செல்லலாம். ஷேர் பண்ணுங்க. 

News April 9, 2025

கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கிரிவலப் பாதையில் தினமு‌ம் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமி 12-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கி மறுநாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:08 மணிக்கு நிறைவடைகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 9, 2025

தி.மலையில் ICICI வங்கியில் நிதி ஆலோசகர் வேலை

image

தி.மலையில் இயங்கி வரும் ICICI வங்கியில் நிதி ஆலோசகருக்கான 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 25-60 வயதுக்குள் இருக்கும் எல்லா பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர வேலையான இதற்கு SSLC முடித்திருந்தால் போதுமானது. வரும் ஜூன் 11ஆம் தேதி வரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>இந்த <<>>லிங்க் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 9, 2025

ஆரி எம்பிராய்டரி, ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக தாட்கோ மற்றும் தனியார் அகாடமி இணைந்து சென்னை வேளச்சேரியில் டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளி கைத்தொழில் பயிற்சி வழங்குகின்றன. 18-30 வயதினருக்கான இந்த 30 நாள் பயிற்சிக்கான தங்கும், உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். விண்ணப்பிக்க: [www.tahdco.com] இந்த தகவலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

News April 9, 2025

திருவண்ணாமலையில் தமிழ் கட்டாயம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். வருகின்ற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!