India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செய்யாறு அடுத்த வாழ்குடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 6 பேர் தகராறில் ஈடுபட்டபோது அதனை தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவரை அந்தப் பகுதியில் இருந்த பலர் தாக்கிய வழக்கில் தினேஷ்குமார், பெருமாள், மணிகண்டன், ராஜேஷ், சேதுராமன், பிரசாந்த், ராஜேஷ் ஆகிய 6 பேரை அனக்காவூர் போலீசார் நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் வரும் சனிக்கிழமை 31.8.2024 அன்று மாலை 5 மணி அளவில் திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கலசபாக்கம் காவல் நிலையத்தில் நேற்று மாலை வினாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாகவும், விழா எப்படி நடத்துவது என்பது குறித்து தனித்தனியாக நோட்டீஸ் வழங்கி ஆலோசனை கூட்டம் உதவி ஆய்வாளர் தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் பாஜக ஒன்றிய செயலாளர் யுவராஜ், கலசபாக்கம் பாஜக ஒன்றிய செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், சட்டபேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளரும், ஆரணி எம்.பி-யுமான எம்.எஸ்.தரணிவேந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அப்பகுதியை சேர்ந்த மக்கள், கோவிலை சூழ்ந்திருந்த புதர் செடிகளை அகற்றியபோது, சிவலிங்கம் மற்றும் கொடிமரம் மட்டும் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அதே இடத்தில் பழமை வாய்ந்த சிவலிங்கத்திற்கு இன்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வந்தவாசி தாலுக்கா கீழ் வில்லிவனம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற கூலி தொழிலாளி கடந்த 2019 ஆம் வருடம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையம் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை செய்த போக்சோ நீதிபதி பார்த்தசாரதி, பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரயிலின் மூலம் 21 பெட்டிகளில் 1300 மெட்ரிக் டன் யூரியா வந்து சேர்ந்தன. அவற்றை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தச்சம்பட்டு கிராமத்தில் 3 பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இதில், 300 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்காக தர்மசத்திரம் கட்டிய தலைவனின் கல்வெட்டு மற்றும் 350 ஆண்டுகள் பழமையான மற்றொரு கல்வெட்டு உள்ளன. வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர் இக்கல்வெட்டை கள ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.இக்கல்வெட்டுகள் இரு அற செயல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டில் உள்ள வந்தவாசி பைபாஸ் சாலையில் வசிப்பவர் தீர்த்தகிரி.நேற்று மாலை மளிகை பொருட்கள், காய்கறிகளை சேத்துப்பட்டு மார்க்கெட் பகுதியில் இருந்து வாங்கிக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.திடீரென வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தி.மலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், தி.மலையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
Sorry, no posts matched your criteria.