India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக மழை பெய்யக்கூடும்.
திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புதிய சுங்க சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை கரியமங்கலம், விழுப்புரம் நங்கிளிக்கொண்டான், கிருஷ்ணகிரி நாகம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் ஊர்வலத்துக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
தி.மலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆக.30ஆம் தேதி வேதியியல் துறை கட்டடத்தில் உள்ள மாணவியர் கழிவறையில் பாம்புகள் இருந்ததை கண்டு மாணவிகள் முதல்வரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, தீயணைப்பு துறையினரால் பாம்புகள் அனைத்தும் பிடிக்கப்பட்டன. மேலும், கல்லூரி வளாகத்தில் பாம்புகள் இருக்கின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் 24-25 சொர்ணவாரி பருவத்திற்கு முதல் கட்டமாக 34 மையங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 11.09.2024 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு 09.09.2024 முதல் துவங்கப்பட உள்ளது. விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இந்தாண்டு ஆறு பேர் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர் . அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், ஆவூர் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியை இராம தேவி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் செந்தில், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் லட்சுமி காந்தன், நகராட்சி மேல்நிலை பள்ளி ஆசிரியர் வெங்கட்ராமன், அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் கோ.சந்திர நாதன் ஆகியோர் தேர்வு.
தி.மலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளை தோ்வு செய்து தலா ரூ.15 ஆயிரம் பரிசு & பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோா் செப். 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இங்கி வரும் கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் 20.9.2024 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள முன் தொகையாக ரூ.2400 செலுத்த வேண்டும். ஏலத்தில் அதிக விலை கேட்பவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். வாகனங்களை வேலை நாட்களில் நேரில் பார்வையிடலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தி.மலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள் முற்றோதல் நேராய்வு நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் வரும் 20.09.2024ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றும் அல்லது www.tamilvalarchithurai.tn.gov என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரா் திருக்கோயிலில் ரூ.73 கோடியில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கிரிவலப் பாதையை மேம்படுத்துதல் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
Sorry, no posts matched your criteria.