India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
தி.மலை, கிரிவலப்பாதையில் மேம்படுத்தப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்துக்கான பணிகள், பக்தர்கள் தங்கும் இடம், பேவர் ப்ளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, அவை குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வந்தவாசி அடுத்த சீயமங்கலம் கிராமத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு புஷ்பா என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ரூபாய் 3000 லஞ்சம் கேட்டதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புஷ்பாவிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களமாக பிடித்து தற்போது வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (அக்.19) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்ட உள்ளன. சிறுங்கட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், கீழ்பென்னாத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும்
துணை முதல்வரான பிறகு முதல் முறையாக இன்று (அக்.18) மாலை திருவண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறாா். மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பாதிரி முதல் பெரியவல்லி வரை ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் புதிதாக போடப்பட்ட சாலைகளை சேதப்படுத்திய வனத்துறையை கண்டித்து, திருவண்ணாமலையில் அக்.21ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தென் பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்து, 100 அடியை இன்று எட்டியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையின் அளவு திருவண்ணாமலை 2, செங்கம்-27 , போளூர்-5 ஜமுனாமரத்தூர்-9 கலசப்பாக்கம் 5 தண்டராம்பட்டு 9 ஆரணி 15 செய்யார் 17 வந்தவாசி 17.2 கீழ்பெண்ணாத்தூர் 8 வெம்பாக்கம் 24 சேத்துப்பட்டு 12 மிமீ மழையளவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் முன்னேற்றம் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தலோசிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (18-10-2024) மாலை வருகிறார். மேலும் நாளை மறுநாள் 19-ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
புரட்டாசி மாதப் பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை திரளான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். 14 கி.மீ. கிரிவலப் பாதையில் அருணாசலேஸ்வரர் மற்றும் அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனர். மழை முன்னெச்சரிக்கையால் மாவட்ட ஆட்சியர் பக்தர்கள் வருவதை தவிர்க்க அறிவுரை அளித்தார்.
Sorry, no posts matched your criteria.