Tiruvannamalai

News September 9, 2024

தி.மலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 9, 2024

வந்தவாசி அருகே விபத்தில் 3 இளைஞர்கள் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். வந்தவாசியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த பைக்கும் வெண்குன்றம் கூட்டுச்சாலை அருகே மோதிக்கொண்டது. இதில் ஆகாஷ், விஜயன் என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

News September 9, 2024

தி.மலையில் இந்த இடங்களில் மட்டுமே அனுமதி

image

திருவண்ணாமலையில் அனுமதி அளிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தாமரைக் குளம், சிங்காரப்பேட்டை ஏரி, செங்கம் பச்சையம்மன் கோயில் குளம், கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி குளம், பூமா செட்டி குளம், போளூா் ஏரி, கூா் ஏரி ஆகிய நீா்நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News September 8, 2024

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 10 தி.மலை மாவட்ட தடகள சங்கம் நடத்தும் மாவட்ட தடகளப் போட்டி 14,16,18,20 ஆகிய வயது வாரியாக மாணவ, மாணவிகளுக்கு நடைபெற உள்ளது. இதில் தனிநபர் 2 போட்டிகளில் பங்கு பெறலாம். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் மாணவர்கள் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என மாவட்ட தடகள் சங்கம் தெரிவித்துள்ளது.

News September 8, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 8, 2024

7 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

image

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6.74 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆகியோர் வழங்கினர்.

News September 8, 2024

வந்தவாசி அருகே 2 பேர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வெண்குன்றம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆகாஷ் மற்றும் விஜயன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவா என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2024

நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

image

தி.மலை மாவட்டம், தெள்ளாரில், ரோட்டரி கிளப் ஆப் தெள்ளாறு சார்பில் ரோட்டரி நல்லாசிரியர் 2024 விருது வழங்கும் விழா சங்க தலைவர் ஜெ. ஏழுமலை தலைமையில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் T.G.P.மோதிலால், எஸ்.அன்பு ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் & ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 8, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் தொடக்கம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேரடி கொள்முதல் நிலையங்கள் வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது பிரச்னைகள் ஏற்பட்டால் 9487262555 மற்றும் 6385420976 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News September 8, 2024

தி.மலையில் 3.24 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி

image

பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி எனப்படும், விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி டிபாசிட் செய்யப்படும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 3.24 லட்சம் விவசாயிகள் நிதி உதவி பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், மூன்று தவணைகளில் மொத்தம் 6,000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

error: Content is protected !!