India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழக இந்து சமய அறநிலை துறை சார்பில் இன்று ஆரணி புத்திர காமேடீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்து அரசு சார்பில் வழங்கப்பட்ட சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுந்தீவனம் உற்பத்தித் திட்டத்தின் கீழ், 2024-25 ஆம் ஆண்டில் 50% மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும். விவசாயிகள் பசுந்தீவன உற்பத்தியில் ஈடுபட ஆர்வமுள்ளவராக இருந்தால், கால்நடை உதவி மருத்துவரை அணுகி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பௌர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் கிரிவலப் பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் இன்று அதிரடியாக அகற்றினர்.
தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் காவல்துறையினர் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்ட 700 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 23.10.2024 ஆம் தேதி காலை 8.00 மணிமுதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக ஏல தேதி ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.