India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் நூக்கம்பாடி கிராமத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். நள்ளிரவில் நடந்த விபத்தில் ரமேஷ், அவரது உறவினர் முருகன் மற்றும் தர்மராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த காளிதாஸ் என்பவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரணி சேர்ந்த விஜய் கிருஷ்ணன் என்பவர் 2015-ஆம் ஆண்டு சுந்தரவேல் என்பவரிடம் ரூ.6 லட்சம் கடன் பெற்று காசோலை மோசடி செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று விஜய் கிருஷ்ணனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் சுந்தரவேலுக்கு நஷ்ட ஈடாகவும் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் கூடுதலாக 3 மாதம் தண்டனையை நீடித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆரணி சேர்ந்த விஜய் கிருஷ்ணன் 2015-ஆம் ஆண்டு சுந்தரவேல் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்று காசோலை மோசடி செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் விஜய் கிருஷ்ணனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாயை சுந்தரவேலுக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் கூடுதலாக 3 மாதம் தண்டனையை நீடித்து தீர்ப்பு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்கான பணியை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாலித்தீன் பைகளை ஒழிக்கும் விதமாக அதிகாரிகளுக்கு மஞ்சள் பயிர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த 2 குழந்தைகள் தற்போது சென்னை வடபழனி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் உள்ளனர். குழந்தைகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிகள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் சென்னை வந்து குழந்தைகளை அழைத்து செல்லலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தி.மலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்கான பணியை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார். இதில், அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, செங்கம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான வளையம்பேட்டை, செங்கம், குயிலம், மேல்செங்கம், அண்ணாந்தவாடி, சின்னசமுத்திரம், சேட்பேட்டை, நெடுங்குணம், பெருவளூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பார்த்திபுரம், ரெட்டியபாளையம், பெருகுளத்தூர், மலையனூர் செக்கடி, கிழவனகபாடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
தாய்மார்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது ஓட்டுக்காக அல்ல. பெண்களின் முன்னேற்றத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய தாய் வீட்டு சீதனம் என்று திருவண்ணாமலையில் நடந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் வழங்கப்படும் மாவட்டங்களில் திருவண்ணாமலை முதலிடத்தில் இருக்கிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஆரணி சட்டமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 2,735 பயனாளிகளுக்கு 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யாறு ஜோதி செங்கம் கிரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கனிகுலுப்பை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகள் காவ்யா(5) குளிர்பானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சில வாரங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குளிர்பானம் அருந்தியதால் சிறுமி உயிரிழக்கவில்லை என சென்னையில் உள்ள உணவு ஆய்வக அறிக்கை சான்றளித்துள்ளது. இதனை அடுத்து அவதூறு ஏற்படுத்தியதாக பெற்றோர்கள் மீது குளிர்பான நிறுவனம் போலீசில் புகாரளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.