India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமைப் பயன்படுத்தி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04175 – 233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான வாராந்திர ஆய்வுக்கூட்டம் தொடர்புடைய அரசுத் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலை பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திருவள்ளுவர் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள விவசாய நிலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து காயமடைந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமைப் பயன்படுத்தி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04175 – 233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையிலிருந்து தென்பெண்னை ஆற்றில் 4.042 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்க கூடிய திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தி.மலை மாவட்டத்தில் அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான வாராந்திர ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் தொடர்புடைய அரசுத் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (21.10.2024) நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஆரணி அருகே சேவூர் ராட்டினமங்கலம் பகுதியில் இன்று புதிதாக திறக்கப்பட்ட புதிய ஆடைகள் ஷோரூமை சின்னத்திரை நடிகர் பாலா கலந்து கொண்டு புதிய ஆடைகள் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆரணி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் சின்னத்திரை புகழ் பாலாவை கண்டு அனைவரும் தங்களுடைய தொலைபேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.