Tiruvannamalai

News February 18, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 17, 2026

தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

தி.மலை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை பெற நீங்க அரசு ஆபீஸுக்கு ஏறி, இறங்கி அலைய வேண்டாம். 50 வகையான அரசு சேவைகள் & சான்றிதழ்களை எங்கேயும் அலையாமல், 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News February 17, 2026

தி.மலை: உங்க வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 17, 2026

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 948 மனுக்கள்!

image

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் நேற்று மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 793 மனுக்களை பெற்றார். மேலும், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 54 மனுக்களும், செய்யார் சார் ஆட்சியர் தலைமையில் 101 மனுக்களும் என, மொத்தம் 948 மனுக்கள் பெறப்பட்டது.

News February 17, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

தி.மலை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

தி.மலை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

தி.மலை: கோயிலுக்கு வந்தவர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் குண்டூர் பிரம்மம்காரி தெருவைச் சேர்ந்தவர் தோட்டா சத்ய நாராயணா(55). நிதி நிறுவன அதிபரான இவர், நேற்று முன் தினம் தனது நண்பட்ர்களுடன் சிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது புதுமல்லவாடி கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது இவரது கார் மோதியது. இதில் பலத்த பாயமடைந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமகா உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலையில் பரிதாப பலி!

image

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(45). இவரது மகன் கனிஷ்(18), சென்னையில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரை சென்னைக்கு பஸ் ஏற்ற பைக்கில் பஸ் நிலையம் நோக்கி சென்றார். பைக்கை கனிஷ் ஓட்டினார். அப்போது, திண்டிவனம் சாலையில் பின்னார் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். தொடர்ந்து, கனிஷ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலையில் விஷம் குடித்து தற்கொலை!

image

ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி தமிழ்செல்வி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், தமிழ்செல்வி கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த பிப்.14ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தவரை மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!