India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தின் கீழ் இயங்கி வருகிறது திருவண்ணாமலை மாவட்ட அருங்காட்சியகம்.இந்த அருங்காட்சியகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தா.மோட்டூர் தொடங்கி 8ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த துர்க்கையின் புடைப்புச் சிற்பங்கள், நடுகற்கள், புத்தர் உருவங்கள் எனப் பலவகை சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (29.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கபட்டுள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், பணிக்குழு நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணியில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை விடுத்துள்ளார்.
கலசபாக்கம் அடுத்த தென்மாகதேவ மங்கலத்தில் தேவராயன் பாளையம் சீனந்தல் ஆகிய பகுதிகளில் விஜயநகர கால ஆறு நடு கற்களையும், இரண்டு கல்வெட்டுகளையும் நேற்று ஆய்வு நடுவம் சார்பில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று ஆய்வு நடுவத்தில் நிர்வாகிகள் பாலமுருகன், பழனிச்சாமி, விநாயகம், ராஜா, சிவா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் 26 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவரது நிலம் முள்ளண்டிரம் கிராமத்தின் மலைப் பகுதிக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் நிலத்தில் இருந்துள்ளன. நேற்று காலையில் பாா்த்தபோது, இவரது ஆடுகள் 13, மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த சிலரது ஆடுகள் என 20 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மா்ம விலங்கு கடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (28.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறுசிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ2,100 கோடி கடன் வழங்கபடும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜா அறிவித்தார்.அதில் திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களில் ஐ.டி.துறையில் தலா 500 பேருக்கு வேலையளிக்க, புதிய மினி டைட்டல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலை மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களின் ஆக்கிரமிப்புகள் குறித்து, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் தகவல்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 08.10.2024 மற்றும் 09.10.2024 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் திருவண்ணாமலை மாவட்டத்தில தனியார் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.