India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்திம் சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் தொழிற்சங்க உரிமைக்காக போராடி வருகின்றனா். அவா்களுக்கு ஆதாரவாக தொழிற்சங்க தலைவா்களும் போராடுகின்றனா்.ஆனால் தமிழக அரசு அவர்களை கைது செய்வதாக கூறி,கைது செய்யும் போக்கை கைவிடக் கோரியும் திருவண்ணாமலையில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
தி.மலை மாவட்டம், புதூர் பீமானந்தல் பகுதியில் சின்னதுரை என்பவருடைய விவசாய கிணற்றில், தண்டராம்பட்டு நெடுங்காவாடி கிராமம் ராமசாமி என்பவர் பம்பு செட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மின் மோட்டாரில் திடீரென மின்சாரம் பாய்ந்து ராமசாமி சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அங்கு விரைந்த தண்டராம்பட்டு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தி.மலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (01.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு புதன்கிழமை நாளை காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு, தனியாா் மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் உத்தரவை மீறுபவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ள்ளார்.
தண்டராம்பட்டு அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் மகன் ரோஷித்(7), குபேந்திரன் மகன் தருண்(7) இரு சிறுவர்களும் விளையாட வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்ற சிறுவர்களிடம் விசாரித்தனர். அதில் குளிப்பதற்காக கிணற்றிற்கு சென்றது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது இருவரும் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கள்ளச்சாரயம் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (30.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரி (ULOG3) மாணவர்கள் குழுவினர் ரூபாய் 25,000/- செலவில் தயாரிக்கப்பட்ட 500 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை ஹீலியம் பலூன் உதவியுடன் வானில் இன்று பறக்கவிட்டார்கள். இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட நிபுணர் குழு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் அச்சத்துடன் உள்ளனர்.மேலும் இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு குழு மோப்ப நாயுடன் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கம் பகுதி பரபரப்பாக உள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. வெளிமாநில பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், நகரில் வாகன நெரிசலும் காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.