India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: பல்லடம் அருகே சேமலைகவுண்டன் பாளையத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 11 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது குடும்ப உறவினர்களிடம் போலீசார் சார்பில் கைரேகை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி தாராபுரம் மணக்கடவு கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், கொளத்துப்பாளையம் ராம் நகரில் ராமச்சந்திரா ஹால், புதிய பைபாஸ் சாலை, பழனி சாலை எதிரில் வருகிற 3ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் நடக்கிறது.
திருப்பூரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எம்எல்ஏ ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. இங்கு கூடுதல் காலை நிலையம் அமைக்க வேண்டும். போலீசார் அடிக்கடி இடமாற்றத்தால், புதிதாக வரும் காவல் அதிகாரிகளுக்கு இப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கால அவசாகம் தேவை. உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும் என்றார்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2025 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு ரூ.20,000, ரூ.10,000 ரூ.5,000 என காசோலைகள் மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
திருப்பூர், அவினாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கோவை மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் 75 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்றோடு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அளித்த தகவலை அடுத்து, வெள்ள அபாய நடவடிக்கைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும், அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (30.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: பல்லடம் 3 பேர் கொலை வழக்கில் 10 தனி படை அமைத்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், செந்தில் குமாரை வெட்டிய மர்ம கும்பல், அவருடைய செல்போனில் இருந்து சிம் கார்டை எடுத்து இரண்டாக உடைத்து போட்டுச் சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள், கொலை நடந்த இடத்தை சுற்றி யாருடைய செல்போன் சிக்னல்கள் இருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் செம மலை கவுண்டம்பாளையத்தில் வசித்து வந்த, விவசாயி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஐஜி செந்தில் குமார் அதனை 10 தனிப் படைகளாக உயர்த்தி, விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.