India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த அவந்திக்கா மற்றும் மோனிகா இருவரும் கல்லூரி தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், இருவரும் தனித்தனியாக இருக்குமாறு, அவந்திகாவின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று இருவரும் அவந்திகாவின் வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானியம் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறு தானியம் சார்ந்த உணவுகள் சமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் காய்கறிகளில் விலங்குகள், கடவுளின் உருவங்கள் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தாராபுரம், திருப்பூர், உடுமலை என மூன்று கல்வி மாவட்டங்களாக பிரிந்து இருந்தாலும், ஒருங்கிணைந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் செயல்பட்டு வருகின்றது. திருப்பூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு டிசம்பர் மற்றும் 25ம் ஜனவரி மாதங்களில் ஆய்வு அறிக்கை அளித்துள்ளார்.
திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக மத்திய பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், அவிநாசி அடுத்த பழங்கரை பகுதியைச் சேர்ந்தவர் அவந்திகா. அவருடைய தோழி மோனிகா. இருவரும் திருமுருகன்பூண்டி அருகே தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவந்திகாவின் வீட்டில் அவந்திகா மற்றும் அவரது தோழி மோனிகா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காங்கேயத்தில் வெள்ளகோயில் -செம்மாண்டாம்பாளையம் சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த, சரஸ்வதி மற்றும் ராகவி ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், செல்வி.யாழினி என்பவருக்கு, சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குக் கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில், வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பல்லடம் அடுத்த சின்னகரை லட்சுமி நகர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் சிலம்பரசன் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு, சிலம்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். பக்தர்கள் கனவில் தோன்றி ஆண்டவன் கூறிய பொருளை கொண்டு வந்தால், பொருளை பூ வைத்து உத்தரவு கேட்பார். அதில் அனுமதி கிடைத்தால் மட்டுமே உத்தரவு பொருள் மாற்றப்படுகிறது. இவ்வாறு நேற்று காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகரில் இன்று (09.12.2024), இரவு 11.00 மணி முதல், காலை 6.00 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில், பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Sorry, no posts matched your criteria.