Tiruppur

News August 22, 2025

திருப்பூரில் விநாயகர் சிலைகள் கரைக்க இடங்கள் ஒதுக்கீடு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். விசர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம், ஆண்டிபாளையம், பொங்கலூர், எஸ் வி புரம், கணியூர், கொடிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் மற்றும் குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News August 22, 2025

திருப்பூர் பிராசசிங் துறைக்கு மானியம்

image

திருப்பூர்; தமிழக அரசின் புதிய ஜவுளி கொள்கையில், பிராசசிங் நிறுவனங்களுக்காக, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, திருப்பூர் சாய ஆலைகளுக்கு பயனுள்ளதாக அமையும்.தகுதிவாய்ந்த நிறுவனங்கள், தங்கள் விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையோடு, இரண்டு வழிமுறைகளில், ஒற்றை சாளர ‘ஆன்லைன் போர்ட்டல்’ மூலம் பதிவு செய்யலாம்; அனைத்து ஆவணங்களுடனும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

News August 21, 2025

திருப்பூர்: பட்டா மாற்றம், திருத்தம் ஆன்லைனில்!

image

திருப்பூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>https://eservices.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தமிழகத்தில் உள்ள நிலம் தொடர்பான விவரங்களை வழங்குகிறது. இதில் பொதுமக்கள் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்றவற்றிற்கு, இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 21, 2025

திருப்பூரில் ரூ.90,000 சம்பளத்தில் அரசு வேலை

image

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,365 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 21, 2025

முருகானந்தம் கொலை வழக்கில் முன் ஜாமீன் ரத்து

image

தாராபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி தாளாளர் தண்டபாணி உள்ளிட்ட சில குற்றவாளிகள் முன் ஜாமின் கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் மனதாக்கல் நேற்று செய்தனர். திருப்பூர் நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

News August 21, 2025

திருப்பூர்:வாடகைப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!

image

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்

News August 21, 2025

அவிநாசியில் சாயம் கலந்த பட்டாணி பறிமுதல்

image

அவிநாசி கைகாட்டிப்புதுார் வாரச்சந்தையில் சாயம் கலந்த பட்டாணி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு சந்தையில் ஆய்வு நடத்தி, ரசாயன சாயம் பூசப்பட்ட 6 கிலோ பட்டாணியை ஒரு வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்தார். முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோல் நடந்தால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது

News August 21, 2025

திருப்பூரில் திடீர் மாற்றம் தெரிஞ்சிக்கோங்க!

image

திருப்பூர், அணைப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வஞ்சிபாளையம் – புஷ்பா சந்திப்பு: அவிநாசி சாலை அல்லது ரங்கநாதபுரம் வழியாகச் செல்லலாம்.சிறுபூலுவப்பட்டி வழியாக குமார் நகருக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுபூலுவப்பட்டிக்குச் செல்லும் வாகனங்கள் சலவை பட்டறை சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.SHARE பண்ணுங்க!

News August 21, 2025

திருப்பூர் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில், மங்களம் சாலை மற்றும் சிறுபூலுவப்பட்டியை பகுதியை இணைக்க கூடிய வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது‌. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா ரவுண்டானா வருகின்ற பகுதியில், சோதனை அடிப்படையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

error: Content is protected !!