Tiruppur

News December 17, 2024

திருப்பூர் தலைப்புச் செய்திகள்

image

1.பஞ்சலிங்க அருவியில் 6வது நாளாக குளிக்க தடை
2.மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்
3.புதுப்பை,காங்கேயத்தில்,தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
4.அவிநாசியில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
5.திருப்பூரில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

News December 17, 2024

புத்தகத் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

திருப்பூரில் நடைபெற்று வரும் 10ஆவது புத்தகத் திருவிழா திருவிழாவின் நாள் நிகழ்வில் தமிழ்நாடு மனித வள மேலாண்மை மேலாண்மைத் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். கண்காட்சியில் உள்ள பதிப்பகங்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்வையிட்டார். உடுமலை நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.வேலுச்சாமி சத்தியம் பாபு புத்தகதிருவிழாவில் கலந்து கொண்டார்.

News December 17, 2024

திருப்பூர்: துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் வெளியீடு

image

திருப்பூருக்கு வருகிற 19ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி வருகைபுரியும் நிலையில், தற்போது அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ரயில் நிலையம் எதிரில் பேராசிரியர் உருவப்படத்திற்கு மரியாதை, திருப்பூர் தெற்கு கலைஞர் நூலகம் திறப்பு விழா, ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம், திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு, கட்சி நிர்வாகி இல்ல திருமணம் ஆகியவை அடங்கும்.

News December 17, 2024

உதயநிதி ஸ்டாலின் வருகை: போலீசார் ஆலோசனை

image

தமிழக துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் திருப்பூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வருகை தர உள்ளார். திருப்பூர் வரும் அவர் முன்னதாக குமரன் நினைவகம் அருகே பேராசிரியர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

News December 17, 2024

தக்காளியில் விதவிதமான பூக்களை உருவாக்கும் நெசவு கலைஞர்

image

குண்டடம் அருகேயுள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (52), கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் ஓய்வு நேரங்களில் அருகேயுள்ள கோவில் விழாக்களை சோசியல் மீடியாக்களில் லைவ் செய்வது, வித்தியாசமான சமையல் செய்வது என அசத்தி வருகிறார். அதிலும் தக்காளி, ஆரஞ்சு, ஆப்பிள் பழங் களை நைசாக வெட்டி வித்தியாசமான பூக்களை உருவாக்கி வியக்க வைக்கிறார்.

News December 17, 2024

திருப்பூரில் தக்காளி மளமளவென சரிவு

image

திருப்பூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ ரூ.70 முதல் அதிகபட்சம் ரூ.90 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆந்திர மாநில தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை சரிவை சந்தித்துள்ளது. ஆட்டோக்களில் தக்காளியின் தரத்திற்கு தகுந்தவாறு 4 கிலோ ரூ.100, ஐந்து முதல் 6 கிலோ ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது.

News December 17, 2024

திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு 11.2% வளர்ச்சி

image

திருப்பூரில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த மாதம் 11.2% வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக உயர்ந்து கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 9,460 கோடி ரூபாய் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.2% அதிகம் என ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தினர் நேற்று தெரிவித்தனர்.

News December 17, 2024

திருப்பூருக்கு உதயநிதி வருகை: பளிச்சிடும் சாலைகள்

image

திருப்பூருக்கு நாளை மறுநாள் (டிச.19) துணை முதல்வர் உதயநிதி வருகையை முன்னிட்டு நகரப் பகுதியில் தூய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அன்று காலை, உடுமலையில் நடைபெறும், கருணாநிதி நூற்றாண்டு விழா நினைவு நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

News December 17, 2024

திருப்பூர் மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

image

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 39வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் & 400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் முதலிடம் பிடித்து இரண்டு தங்க பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்த திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீ வர்த்தினி மரியாதை நிமித்தமாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமாரை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பெற்றோர்& பயிற்சியாளர் இருந்தனர்.

News December 17, 2024

சர்வதேச தேயிலை தினம்: அமைச்சர் வாழ்த்து

image

சர்வதேச தேயிலை தினத்தை ஒட்டி தேயிலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், தேனீர் கடை உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மற்றும் தேனீர் விரும்பிகளுக்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சாமிநாதன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!