India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (டிச.20) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இம்முகாமில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்து வேலை தேடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க
திருப்பூரில் நாளை( டிச.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, சந்தைப்பேட்டை துணை மின்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கலெக்டர் அலுவலக துணை மின்நிலையம், பூம்புகார், கருப்பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம், அருள்புரம் துணை மின்நிலையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், சென்னிமலைப்பாளையம் பகுதியில் மின்விநியோகம் இருக்காது.
உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில், அம்பேத்கரை அவமதித்து பேசியதாக கூறி, திமுக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் நகர திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி பொறுப்பேற்றது முதல், காவல் துறையில் சிறப்பாக பணிபுரியும் காவலர்களை, உடனுக்குடன் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் காவல் துறையினரை இன்று நேரில் அழைத்து அவர்கள் பணியினை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
தமிழகத்தின் மிக முக்கிய ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று நடத்திய கடையடைப்பு மூலம் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் வரி உயர்வுகளை கைவிட வேண்டும் என திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன் வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூரில் திரையரங்குகளில் காலை, மதியம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்காக ஒவ்வொரு திரையரங்கம் முன்பும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாலை வரை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இல்லாத வகையில் திருப்பூர் மாநகராட்சியில் அதிக அளவில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடைகளுக்கு ஜிஎஸ்டி வரி ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று (டிச.18) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் திருப்பூரில் ஒரே நாளில் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் சொத்துவரி உயர்வு & கடை வாடகைக்கு 18% ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, வணிகர்களின் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, திருப்பூரில் மட்டும் சொத்துவரி உயர்த்தியது குறித்தும், அதை குறைக்கவும் நேரில் வலியுறுத்துவோம். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும் என திருப்பூர் மாமன்ற அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.20) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலை தேடுபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம். தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.