Tiruppur

News January 23, 2025

திருப்பூரில் ஆறு கோள்களை பார்த்து ரசித்த மக்கள்

image

திருப்பூரில் வானில் ஆறு கோள்கள் நேர்கோட்டில் வந்துள்ளது. திருப்பூர் பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் பார்த்து ரசித்தனர். கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வட்டப்பாதையில் சுழன்றபடி, சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில சமயங்களில் கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வும் நடைபெறும். இதில் நேற்று வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யூரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன.

News January 22, 2025

ஆசிரியர் பணியிடை நீக்கம்

image

ஊதியூர் அருகே உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய சிவக்குமார் (54), 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிவக்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆசிரியர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உதயகுமார் உத்தரவிட்டார்.

News January 22, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது 

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவர் சண்முகம் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் சிறுமியின் தாயாருக்கு உதவி செய்வது போல் வந்து மகளிடம் அத்துமீறியதாக தாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

News January 22, 2025

திருப்பூரில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா திறப்பு!

image

திருப்பூர் ஊத்துக்குளி சாலை ரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வரும் 24ஆம் தேதி பாஸ்போர்ட் சேவா கேந்திரா துவங்கப்படவுள்ளது. இனி திருப்பூர் மக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக, கோவை சென்று வரவேண்டியது இல்லை. பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் உள்ளிட்ட முதல் கட்டப்பணிகள், டோக்கன் வழங்குதல் உள்ளிட்டவை, இம்மையம் மூலமாகவே மேற்கொள்ளப்படும்.

News January 22, 2025

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

image

திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திக் வயது 35. வணிக நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான கார்த்திக், அடிக்கடி மது குடித்துவிட்டு, திருமணத்தை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் மன வேதனையில் இருந்த கார்த்திக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 22, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News January 21, 2025

நீதிமன்றத்தில் கூச்சலிட்ட பெண் கைது

image

பல்லடம் சாலை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயா. கணவன் செந்தில்குமாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு சமரச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்று மாலை விசாரணை நடைபெற்ற போது நீதிபதி முன் விசாரணை முறையாக நடைபெறவில்லை என கூச்சலிட்டுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் ஜெயாவை கைது செய்தனர். 

News January 21, 2025

ஊதியூர் அருகே விபத்து 

image

திருப்பூர், ஊதியூர் அருகே டிராக்டரும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. ஊதியூர் அடுத்த கொடுவாய் நாட்டான்வலசு பகுதியில் இன்று மாலை பழனிக்கு தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடை பகுதியில் டிராக்டர் திரும்பியபோது தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதியது. இதில் லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்.

News January 21, 2025

அவைத்தலைவர் உடலுக்கு Ex அமைச்சர் அஞ்சலி

image

பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் நகர அதிமுக அவைத்தலைவர் பி.என்.பழனிச்சாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்றைய தினம் காலமானார். இதனை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

News January 21, 2025

பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஆசிரியர் கைது

image

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு பள்ளி ஆசிரியரான சிவக்குமார் என்பவரை கைது செய்த நிலையில் வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!