India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம், விவசாய கூலித் தொழில் புரிந்துவரும் நபர்களுக்காக உழவர் பாதுகாப்புத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின்கீழ் 1,43,075 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு உதவி தொகைகள் வழங்கபடுகிறது. மேலும் தகுதியுடையோர் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 27ந் தேதி & ஜனவரி 3-ம் விண்ணபிக்கலாம்.
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தை ஒட்டி, சுற்றுலாத்துறை சார்பில், படகு இல்லம், கடந்த மாதம் திறக்கப்பட்டது. படகு இல்லத்தில் மீட்பு படகு இல்லாததால், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே, தற்காலிகமாக மூடப்பட்டது. கடந்த வாரம் மீட்பு படகு கொண்டுவரப்பட்ட நிலையில், பாதுகாப்பு ஒத்திகை ஆய்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் படகு இல்லம், மீண்டும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1.குளத்தில் மூழ்கி மூன்று பேர் சடலமாக மீட்பு
2.உடுமலையில் ஆசிரியர் மன்றத்தின் செயற்குழு கூட்டம்
3.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
4.திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
5.திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம் வரும் (டிச.27) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்குவதோடு பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் இருந்து சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
திருப்பூரில் உள்ள நிஃப்டி கல்லூரியில் நடந்த உலக சேலைகள் தின நிகழ்ச்சியில் மாநிலங்களின் சின்னங்கள் சேலையில் வடிவமைக்கப்பட்டது. குஜராத்தை சேர்ந்த பட்டேலா கேரளாவின் கதகளி, ராஜஸ்தானின் அஜ்ராக் அச்சு, தமிழகத்தின் கோவில் வடிவங்கள் உள்ளிட்ட வடிவமைப்புகள் சேலைகளில் மாணவியரின் கைவண்ணத்தில் அச்சுகளாக நேற்று தீட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம் வரும் (டிச.27) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்குவதோடு பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் இருந்து சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
திருப்பூர், உடுமலையைச் சார்ந்த 16 வயதான பள்ளி மாணவி என்பர் காணமல் போனதாக காவல்துறையில் புகார் கொடுக்கபட்டு வந்த நிலையில், அப்பெண் மற்றும் சென்னையை சார்ந்த 19 வயதான ஆகாஸ், குறிச்சிகோட்டையை சார்ந்த 20 வயதான மாரிமுத்து ஆகிய 3 பேரின் சடலங்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. இருசக்கர வாகனத்துடன் குளத்தில் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர், மணியக்காரம் பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீணை விரைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
1.உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
2.மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
3.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மனுக்களைப் பெற்ற துணை முதல்வர்
4.சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனை
5.உடுமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.