Tiruppur

News January 11, 2025

திருப்பூர் குமரன் 93வது நினைவு தினம் அனுசரிப்பு

image

சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 93வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் குமரன் சாலையில் திருப்பூர் குமரன் உயிர் நீத்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 11, 2025

திருப்பூர் ரேஷன் கடைக்கு HELMET போட்டு வந்ததால் பரபரப்பு

image

திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு பெரியதோட்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேல் சுவர் பெரும்பாலும் இடிந்துவிட்டது. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மீது விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். ஆகவே கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்துவந்து பொங்கல் தொகுப்பு பெற்றனர்.

News January 11, 2025

மூத்தோர் தடகள போட்டியில் வீரர், வீராங்கனைகள் சாதனை

image

தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள சங்கம் சார்பில் மூத்தோர் தடகள போட்டிகள் மதுரையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 73 வீரர்கள், 46 வீராங்கனைகள் உள்ளிட்ட 119 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளில் திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க வீரர்கள், வீராங்கனைகள் 19 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 69 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

News January 10, 2025

திருப்பூர்  இரவு வந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News January 10, 2025

சீமானை கைது செய்ய திருப்பூர் எஸ்பியிடம் மனு

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியாரை அவதூறாக பேசியுள்ளார். பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சமத்துவம் என மனித குலத்திற்கு தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வாழ்ந்த பெரியாரை இழிவாக சட்ட ஒழுங்கு சீர்கேடும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2025

திருப்பூர்: திமிங்கலத்தின் வாந்தி வைத்திருந்தவர் கைது

image

திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்குட்பட்ட கணபதிபாளையத்தில் திமிங்கலத்தின் வாந்தி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வன அலுவலர் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணபதிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவரின் வெல்டிங் பட்டறையில் திமிங்கலத்தின் வாந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 10, 2025

திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு!

image

முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத்திட்டத்தின் கீழ் பயன்பெற, https;//newscheme.tahdco.com) இணையதளம் வாயிலாக, விண்ணப்பம் செய்து, பயன் பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அறை எண் 501-ல், தாட்கோ மாவட்ட மேலாளரை 94450 29552 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

சொந்த ஊர் செல்வோருக்கு போலீசார் வேண்டுகோள்

image

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு, தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்பவர்கள், தங்களுடைய வீட்டின் முகவரியையும், பயண விவரத்தையும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு, கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அவசரகால உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181209 தொடர்பு கொள்ளலாம்.

News January 10, 2025

திருப்பூரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

திருப்பூர் மாநகரில் பணியாற்றும், 3 இன்ஸ்பெக்டர்களை, பணியிட மாற்றம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், வடக்கு சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் 15 வேலம்பாளையத்திற்கும், ஹரி கிருஷ்ணன் போக்குவரத்து புலனாய்வு துறை இன்ஸ்பெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 9, 2025

மகா கும்பமேளாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

மகா கும்பமேளாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோவை திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூர் பனாரஸ் இடையே சிறப்புரையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து வருகின்ற 18ஆம் தேதி பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் இரண்டும் 50 மணிக்கு பனாரஸ் சென்றடையும் என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!