Tiruppur

News April 22, 2025

சிறப்பு ரயில் இயக்கம் 

image

போத்தனூர்- பரவுனி (06055) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் மே 24ந் தேதி வரை சனிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரவுனி சென்றடையும். பரவுனி-போத்தனூர் (06056) வாராந்திர சிறப்பு ரெயில் பரவுனியில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

News April 22, 2025

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 25ம் தேதி கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் காலை 10.30 மணிக்கு கலெக்டர் வளாக அறை எண்: 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது. இந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 22, 2025

சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

image

திருப்பூரில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் சென்ற நபர் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பல்லடம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 10, 12, ஐடிஐ , டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறாலம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

News April 22, 2025

திருப்பூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு 9360671415. இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

திருப்பூர்: ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே, ரயில் மோதி, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார் என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 21, 2025

திருப்பூர்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

image

திருப்பூர் ஊத்துக்குளி இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பது தெரியவந்தது.

News April 21, 2025

திருப்பூர் வட்டாட்சியர் அலுவலர்கள் எண்கள்

image

▶️திருப்பூர் (வ) வட்டாச்சியர் 0421-2200553. ▶️அவினாசி வட்டாச்சியர் 04296-273237. ▶️ பல்லடம் வட்டாச்சியர் 04255-253113.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. ▶️ காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️ உடுமலைபேட்டை வட்டாட்சியர் 04252-223857. ▶️ மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ திருப்பூர் (தெ) வட்டாட்சியர் 0421-2250192.▶️ ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. மக்களே SHARE பண்ணுங்க.

News April 21, 2025

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

error: Content is protected !!