Tiruppur

News January 28, 2025

திருப்பூரில் மேலும் 15 வங்கதேச வாலிபர்களிடம் விசாரணை

image

திருப்பூர் மாநகரில் வங்கதேச வாலிபர்கள் ஏராளமானோர் ஊடுருவி இருப்பதாக தீவிரவாத தடுப்பு குழுவினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், தொடர்ச்சியாக திருப்பூரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வங்கதேச வாலிபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11, திருமுருகன்பூண்டியில் 4 என 15 பேரிடம் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2025

பாறைக்குழியில் 3 பேர் பலி: இழப்பீடு வழங்க பாஜக அறிக்கை

image

திருப்பூர், வேலம்பாளையம், இடுவாயைச் சேர்ந்த ரேவதி, அவரின் இரு மகள்கள் ஆகிய மூன்று பேர் பாறைக்குழியில் துணி துவைக்க சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பா.ஜ., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இந்த இழப்புக்கு, தமிழக அரசு உடனடியாக அந்த குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன்‌ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News January 28, 2025

கல்குவாரி விபத்து எதிரொலி: கலெக்டர் அறிவுறுத்தல்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய நீரில் குளிக்க, துணி துவைக்க சிறுவர்கள், பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. கல்குவாரிகளில் நீராடுதல், விளையாடுதல், துணி துவைத்தல், கால்நடைகளை மேய்த்தல் என பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். கல்குவாரிகளுக்குள் சென்று விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

News January 28, 2025

திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய நீரில் குளிக்கவோ துணி துவைக்க சிறுவர்கள் பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே கல்குவாரிகளில் நீராடுவதற்கோ விளையாடுவதற்கோ துணி துவைப்பதற்கோ கால்நடை மேய்ப்பதற்கோ பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 31 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அறை எண் 20-இல், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்டவா்களை தோ்வு செய்ய இருக்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள www. tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசாரின் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News January 27, 2025

காதலியின் கழுத்தை அறுத்த மாணவன் தற்கொலை

image

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சினேகா 23 என்பவர், திருப்பூர் கருமாரபாளையம் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான தீபக், சினேகாவை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சினேகா மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று சினேகாவின் வீட்டிற்கு சென்ற தீபக், சினேகாவின் கழுத்தை அறுத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினேகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 27, 2025

திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஜன.28) காலை 9 முதல் மாலை 4 மணிவரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மன்னாரை, பரபாளையம், கோல்டன்நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், சென்னிமலைபாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம், ரெங்கிகோ. அதேபோல் <>உடுமலை <<>>பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2025

திருப்பூர் மாநகரக் காவல் 2ஆவது இடம்

image

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதில், முதல் இடத்தினை மதுரை மாநகர காவல் பெற்றது. இரண்டாவது இடத்தினை திருப்பூர் மாநகரக் காவல் பெற்றது. மூன்றாவது பரிசு திருவள்ளூர் மாவட்டக் காவலுக்கு வழங்கப்பட்டது.

News January 26, 2025

திருப்பூர் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருப்பூர் மாநகரில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்னலையில் திருப்பூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!