India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை உள்ளது. இன்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கு மாற்றம் செய்வதால் திறக்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் மூன்றாம் பாலின நபர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வசதியாக வருகிற 7-ந் தேதி முதல் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று குறைதீர்க்கும் முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் அறை எண்.120-ல் நடைபெறும் எனதிருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த கல்வியாண்டின் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி சிவகங்கை மாவட்டம் பாண்டியன் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி கலந்து கொண்டு சாதனை படைத்தார். அவருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2,3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் பவானி நீரேற்றம் மையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், 20ஆம் தேதி வரை 4வது குடிநீர் திட்டத்தில் விநியோகம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது குடிநீர் திட்டத்தில் பெரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் இன்று (பிப்.4) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, கிழவன்கட்டூர், எலையமுத்தூர், எரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், அமராவதிநகர், கோவிந்தபுரம், தும்பளப்பட்டி, குளத்துப்பாளையம், பொன்னிவாடி, மூலனூர், கன்னிவாடி, எஸ்.பாளையம் ஆகிய பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“ திருப்பூரில் தெருவிளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அலுவலர்கள் தங்கள் பகுதிகளை கண்காணிக்க வேண்டும். முறையாக செயல்படாத குப்பைகளை அகற்றும் நிறுவனங்களுக்கு, ரூ.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் நிறுவனங்கள், விதிமுறைகளின் படி செயல்படாவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்ய பரித்துறைக்க்கப்படும்” என திருப்பூர் மேயர் தினேஷ் எச்சரித்துள்ளார்.
‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற திட்டத்தின்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்டச் செயலார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (காங்கேயம், தாராபுரம்) யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், திருப்பூர் தெற்கு (உடுமலை, மடத்துக்குளம்) திருமலை, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக ( அவிநாசி, பல்லடம்) சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.