Tiruppur

News February 11, 2025

சிவன்மலை பற்றி தெரியுமா?

image

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.

News February 11, 2025

திருப்பூரில் ஆதார் சிறப்பு முகாம்

image

இந்திய அஞ்சல் துறை திருப்பூர் கோட்டம், அவிநாசி ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மங்கலம் சாலையில் உள்ள அவிநாசி பெரிய கோவில் பின்புறம் ரோட்டரி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், கைரேகை மாற்றம் செய்யப்படும். இந்த முகாமில் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பூர் அஞ்சல் துறை தெரிவித்துள்ளனர்.

News February 11, 2025

பயிற்சியுடன் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் L&T ஷிப் பில்டிங் நிறுவனம் சார்பில் ITI தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக வரும், 18ம் தேதி, திருப்பூர் அரசு ஐ.டி.ஐ.யிலும், 19ம் தேதி உடுமலை ஐ.டி.ஐ. மையத்திலும் நேர்காணல் நடக்கிறது. இதில் எலக்ட்ரிக்கல் & மெக்கானிக் பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News February 11, 2025

திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி!

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில், பெற்றோர்கள் நேரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News February 10, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய ஊர்களில் இரவு ரோந்து அலுவல் விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு எண் 100ஐ அழைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

திருப்பூர் இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

image

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரணம்பட்டி அருகே, திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24) என்ற வாலிபர் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த மர்ம நபர்கள், வசந்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வசந்த, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 10, 2025

அரசு பள்ளி ஆசிரியர் மீது பரபரப்பு புகார்

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவ, மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 10, 2025

பாலியல் தொல்லை; போக்சோவில் கைது

image

திருப்பூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தையல் தொழில் செய்து வரும் இவர், 12வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் படி கோவிந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 10, 2025

தனியார் பேருந்து விபத்து: ரூ.3லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்

image

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை நேற்று நேரில் சந்தித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

News February 9, 2025

ரூ.25,000 பரிசு! மிஸ் பண்ணிடாதீங்க

image

“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: -1 என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!