India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில், அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், ஹோட்டல் மதுக்கூடங்கள், வெளிநாட்டு மதுபான விற்பனை மையங்கள் உள்ளிட்ட உரிமம் பெற்ற கடைகள் மூடப்படும். விதிமுறைகளை மீறி மதுபானம் விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திருப்பூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பளம் ரூ20,000 -ரூ.35,400 வரை வழங்கப்படும். இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர் மக்களே.., கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. ஏதேனும் வதந்தி பரப்புவது தெரிய வந்தால், அல்லது காவல்துறைக்கு தேவைப்பாட்டால் விசாரணை, கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜாக்கிரதையுடன் பதிவிட அறிவுறுத்தப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.04) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, கைகாட்டிப்புதூர், ராக்கியாபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் அன்று முழுவதும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர்: டிஎன்பிஎஸ் தேர்வுக்கு மொத்தம் 2762 பேர் வராமல் ஆப்சென்ட். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2 (நேர்முகத் தேர்வு/ நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 37 தேர்வு மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், மொத்தம் 2,762 பேர் தேர்வு எழுத வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Sorry, no posts matched your criteria.