Tiruppur

News March 28, 2025

குடிநீர் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு

image

கோடை காலம் முன்னரே திருப்பூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

News March 28, 2025

திருப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி, மது (ம) கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 27, 2025

திருப்பூர்: வலுப்பூர் அம்மன் கோயில்!

image

திருப்பூர், சேமலைக்கவுண்டம்பாளையத்தில், புகழ்பெற்ற வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறார். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என அழைக்கப்படுகிறார். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம். இத SHARE பண்ணுங்க.

News March 27, 2025

மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய கலெக்டர்

image

திருப்பூர், பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இதில் முதல்வர் (புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) சு.மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

News March 27, 2025

உடுமலை கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி 

image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தும்பலபட்டியை சேர்ந்த வசந்தகுமார். இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் படித்து வருகின்றார். பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுடன் வாளவாடி பிரிவு அருகே உள்ள பிரதான கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வசந்தகுமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 26, 2025

மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், தாராபுரம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News March 26, 2025

முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. கிருஸ்துராஜ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் ராணுவவீரர்கள் தொழில் தொடங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் ரூ.1/-.கோடிவரை கடனுதவி வழங்கப்படும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளம் 5 இல் செயல்படும் அலுவலகத்திலும் 0421-2971127 என்ற எண்ணிலும் தகவல் பெறலாம்.

News March 26, 2025

திருப்பூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

திருப்பூரில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

திருப்பூரில் SSLC பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயார்

image

திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து 235 மாணவ, மாணவியர் பொது தேர்வை எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவுபெற்று தயார் நிலையில் உள்ளன.

News March 26, 2025

அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு தொடக்கம்

image

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார். உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!