India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)

மாநகராட்சி குப்பை விவகாரத்தில் ஏற்கெனவே இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம் கிராமங்களில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடந்த ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தில் மேலும் 2 கிராமம் ஆன கரைப்புதூர், இடுவம்பாளையம் கிராமமும் போராட்டத்தில் கைகோர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன் இப்பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

திருப்பூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று அக்.27 முதல் நவ.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 14 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

திருப்பூர் உடுமலை அருகே கோவையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயில் கோமங்கலம் பகுதியில் வந்த போது திடீரென முதியோர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்தார் இந்த விபத்தில் ரயில் மோதி தூக்கி எறியப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் நிலையில், ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.10.2025 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில், இன்று (26.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறையை தகவல் வழங்கவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <

திருப்பூர்: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.