Tiruppur

News April 26, 2025

திருப்பூர்: முக்கிய அதிகாரிகளின் எண்கள்!

image

▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192. ▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553. ▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237. ▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113. ▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857. ▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. ▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இதை SHARE பண்ணுங்க.

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 25, 2025

திருப்பூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

image

▶️ பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி, உடுமலைப்பேட்டை
▶️ முதலைப் பண்ணை அமராவதி சாகர்
▶️ இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம்
▶️ அமராவதி அணை
▶️ திருமூர்த்தி அணை
▶️ உடுமலை திருப்பதி
▶️சிவன் மலை, காங்கேயம்
திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

News April 25, 2025

தம்பதிகள் பிரச்னை தீர்க்கும் முருகன்!

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலையிலுள்ள வெற்றிவேலாயுத சுவாமி கோயிலுக்கும் குளித்தலை ஊர் உருவானதற்கும் சம்மந்தம் உண்டு என்கிறது புராணம். முருகப் பெருமான் கோபித்துக்கொண்டு வந்து அமர்ந்த இடம் எனச் சொல்லப்படும் இந்தக் கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 25, 2025

ஸ்ரீ கந்த பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

image

நஞ்சியம்பாளையம் ஊராட்சி துளசி மேட்டுப்பாதையில் உள்ளது அருள்மிகு கந்தபெருமான் திருக்கோவில். நேற்று குப்புச்சிபாளையம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

News April 25, 2025

திருப்பூர்: இடி மின்னலுடன் மழை..மக்களே உஷார்

image

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 25) 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான திருச்சி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்பத்தூர், உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு

News April 25, 2025

அரசு அசத்தல்.. திருப்பூரில் 6,000 பேர் பயன்

image

தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. திருப்பூரில் பழங்கரை, சோமவாரப்பட்டி, முத்தூர், அவிநாசி, ருத்திர பாளையம், சின்ன வீரன் பட்டி, ஊத்துக்குளி, சிவன்மலை உள்ளிட்ட 14 இடங்களில் முதலாவதாக மருந்தகங்கள் திறக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை 6,081 பேர் மருந்து மாத்திரை வாங்கி பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

உடுமலையில் புற்றுநோய் இலவச மருத்துவ முகாம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரோட்டில் உள்ள மத்திய அரசு பள்ளியில் வருகின்ற 27ஆம் தேதி கோவை தனியார் மருத்துவமனை மற்றும் உடுமலை தன்னார்வ அமைப்புகள் சார்பில் புற்றுநோய் மற்றும் எலும்பு மூட்டு பிரச்சனைகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது எனவே தேவைப்படும் பொதுமக்கள் இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

News April 25, 2025

ரயில்வேயில் வேலை வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <>இங்கு கிளிச் செய்து <<>>ஏப்.12 முதல் மே.11க்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு குறித்து சேலம் ரயில்வே கோட்டம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. SHARE பண்ணுங்க.

News April 25, 2025

சிகிச்சைக்குப் பயந்து இளைஞர் தற்கொலை

image

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைக்கு பயந்த அவர், மருத்துவமனை 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!