Tiruppur

News March 5, 2025

திருப்பூரில் முதல் நாள் தேர்வில் 513 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 513 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 5, 2025

திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

காங்கேயம் அடுத்த மடவளாம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அரசு மதுபான கடை தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சாலையோர மரத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

News March 5, 2025

திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News March 4, 2025

திருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்!

image

திருப்பூர், சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் 4 யுகங்களை கடந்தது என புரணப்படி நம்பப்பட்டாலும், குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறுகிறது. சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக கோவில் அமைந்துள்ளது. வேண்டிய வரத்தை வாரிக்கொடுப்பதால், வாரி வழங்கும் வள்ளல் என பக்தர்களால் சுக்ரீஸ்வரர் போற்றப்படுகிறார்.

News March 4, 2025

மாவட்ட காவல் துறையினரின் இரவு பணி ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, பல்லடம், தாராபுரம், அவினாசி ஆகிய பகுதிகளில் காவல்துறையின் இரவு பணி ரோந்து விபரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 4, 2025

 வெறிநாய்கள் கடித்து 11ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி கிராமம் எலுகாம்வலசுகவுண்டன் தோட்டம் செல்வபாரதி என்பவரின் 11குட்டிகள் 1 செம்மறி வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெறிநாய்கள் கடித்து 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 4, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு வங்கி கடன் குறித்த முகாம்

image

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான வங்கி கடன் திட்ட விழிப்புணா்வு முகாம் கலெக்டா் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரா்கள் நல அதிகாரிகள் மற்றும் வங்கிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்று, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தவா்களுக்கு சுய தொழில் உள்ளிட்டவைகள் தொடங்க உள்ள சலுகைகள் குறித்து தெரிவித்தனர்.

News March 4, 2025

திருப்பூரில் தனியார் மினி பஸ் – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசின் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்தில் 85 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 85 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் ரூ.1600 கட்டணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மார்ச் 15 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News March 4, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் , பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லங்கள் வருகின்ற 20-ஆம் தேதிக்குள் இணையதள போர்ட்டல் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

திருப்பூரில் 294 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு தேர்வு துறையில் நடத்தப்படுகின்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று காலை துவங்கி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் முதல் நாள் தேர்வினை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 294 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!