Tiruppur

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பூரில் மட்டும் 95 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.<<>> ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்

image

திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியான தாராபுரம் சாலையில் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்றைய தினம் கோட்டை மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை காண திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர்.

News February 24, 2025

திருப்பூரில் தொடர்ந்து கைது! நடப்பது என்ன?

image

திருப்பூரில் நேற்று வங்கதேசத்தை சேந்தர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொழில் நகரமான திருப்பூருக்கு வடமாநிலத்தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாட்டவர் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இவர்கள் இங்கு வருவது எப்படி என போலீசாரும், அப்பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

News February 23, 2025

திருப்பூர்: வலுப்பூர் அம்மன் கோயில்!

image

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும், சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டால், நிச்சயம் வியாதிகள் பறந்தோடுமாம்.

News February 23, 2025

திமுக வடக்கு மாநகர பொறுப்பாளர் அறிவிப்பு

image

திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளராக பணியாற்றி வந்த மேயர் தினேஷ்குமார் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளராக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் வடக்கு மாநகர திமுக அமைப்பாளராக திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News February 23, 2025

அமராவதி ஆற்றில் முதலைகள்: அச்சத்தில் மக்கள்

image

திருப்பூர், உடுமலை அடுத்துள்ள கல்லாபுரம் கண்ணாடிமுத்தூர் வழியாக செல்லும் அமராவதி பிரதான ஆறு கல்லாபுரம் பகுதியில் உள்ளது. இங்கு தற்போது பாறைகளின் மேல் ஐந்துக்கும் மேற்பட்ட முதலைகள் அடிக்கடி உலா வந்து கொண்டிருப்பதால், இப்பகுதியில் துணி துவைக்க மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்க வரும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

News February 23, 2025

வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது

image

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமாரம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்துல் ஹூசைன் மற்றும் இப்ராஹிம் ஆகியோரை கைது செய்து புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். திருப்பூரில் தொடர்ந்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

News February 22, 2025

இரவு நேர ரோந்து காவல் அதிகாரி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 22.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இரவு நேர பணி அதிகாரிகளுக்கு தெரிவிக்க திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று பிறந்தநாள்

image

திருப்பூர் மாவட்டம் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து பிரித்து தனி மாவட்டமாக 22.02.2009 அன்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு பிறந்த நாளாக கருதி திருப்பூர் மக்கள் ‘ஹேப்பி பர்த்டே திருப்பூர்’ என்றும், ‘ஹாப்பி திருப்பூர் டே’ என்றும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

News February 22, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 48 பேர் தேர்வு

image

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 28 நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில், 56 ஆண்கள், 51 பெண்கள் என, மொத்தம் 107 பேர் பங்கேற்றனர். இவர்களில், 26 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம், 48 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

error: Content is protected !!