India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம் வருகிற11-ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனு வழங்கி பயன்பெறலாம். SHARE பண்ணுங்க

திருப்பூர் மாவட்ட நிர்வாக கணக்கெடுப்பு படி, 2024 ஜன., முதல், அக்., வரையும், 2025 மார்ச் 20ம் தேதி துவங்கி செப்., வரையிலான, 17 மாதத்தில் தாராபுரம், காங்கயம், உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், மடத்துக்குளம், தெற்கு, வடக்கு, பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி வட்டாரங்களில், 615 செம்மறியாடுகள், 188 வெள்ளாடுகள், 566 கோழிகள் மற்றும், 15 எருமைகள் ஆகியவை, தெரு நாய்களால் கடிப்பட்டு இறந்துள்ளதாக தகவல்.

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, போன்ற படிப்புகளில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 13ம் தேதிக்குள், <

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி அக்.07 அன்று ஆரம்பமாக உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 07.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம்,பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பிரபாத் மண்டோல். இவர் திருப்பூர் கே.என்.எஸ் கார்டன் பகுதியில் தங்கி இருந்து அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். 3வது மாடியில் பணியில் இருந்த அவர், திடீரென தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்ற வைத்த, கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையான காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன் துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பர்மன் என்பவர், திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே கயிறு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது தந்தை அமர் பருமனுக்கும் செல்போனில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அஜித் பர்மன், செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.