India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் போத்தனூரில் இருந்து நிஜாமுதீன் மற்றும் பாரூனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 13-ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர் சென்று திரும்பும் வட மாநிலத்தவர் வசதிக்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது என சேலம் கோட்டை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.03.2025) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், அவினாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அவசர அழைப்புக்கு 108 ஐ அழைக்கவும்.
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வந்தனர். இந்த நிலையில், இதனை தவிர்க்கும் வகையில் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் திருப்பூர் ரயில் நிலையம் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண உள்ளார்கள் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மங்கலம் சாலையை சேர்ந்த தொழிலதிபரிடம் கடந்த 18ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்து கூறி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளார். இதில் இணைந்த தொழிலதிபர் 41 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து சைபர் குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் அறை எண்: 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைக்கவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)
திருப்பூரில் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (05.03.2025) இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.