India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கயம் – கோவை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (65). இவர் தாராபுரம் சாலையில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தாராபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்துக்கள் கோயில் கட்ட ஜமாத் அமைப்பினர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்டுவதற்கு, தானமாக நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள், குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணக்குமார் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
திருப்பூர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளை புதியதாக பழனி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேற்கண்ட மனுவிற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பதிவு செய்யும் முகாம் நாளை 08.03.2025 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பயிற்சி அளிப்பதுடன் மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (7.3.25) தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் அறை எண்: 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைக்கவுள்ளது. 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். Share பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்டம் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி தினேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான. இந்த விபத்தில் தினேஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.