India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை அக்.11 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் அறிய <

திருப்பூர், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் வயதான விவசாயிகள் மற்றும் ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.1,000/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்! மேலும் விபரங்களுக்கு <

அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல். இவரது மனைவி அவ்வையார். அவ்வையாருக்கு அடிக்கடி கெட்ட கனவு வந்ததாக அருகில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். தொடர்ந்து நேற்று முந்தினம் அதிகாலை வீட்டிலிருந்து வெளியேறி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி அருகில் யாரும் இல்லாத இடத்தில் வைத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மக்களே தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அக்.11 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய<

திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(38). இவர் திருப்பூர் ராதா நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முருகேசன் ஆன்லைனில் கடன் பெற்றதால் மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த முருகேசன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல வஞ்சிபாளையம் பிரிவு பகுதியில், லட்சுமண குமார் என்பவர் அங்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அங்கு சோதனை செய்த போலீசார், அங்கு குட்கா இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 4.7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாநகர பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் கொள்ளை உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண் சமூக வலைதளம் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆத்துப்பாளையம், 15 வேலாம்பாளையம், அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், அம்மாபாளையம், போயம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம், செட்டிபாளையம், திருமுருகன்பூண்டி, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

1)திருப்பூர் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு <
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.