India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶️திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
திருப்பூர், பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த <
திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மே 24 வரை இலவச தடகளப் பயிற்சி நடத்தப்படுகிறது. ராக்கியாபாளையம் ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், வேலம்பாளையம் ஆர். எஸ். ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், கரடிவாவி எஸ்எல்என்எம் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அத்லெடிக் அகாடமி பள்ளி மைதானம் ஆகிய 7 இடங்களில் இது நடத்தப்படுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !
திருப்பூர்: காங்கேயம் வட்டத்தில் உள்ளது சிவன்மலை. இமயமலையை சிவபெருமான் வில்லாக வளைத்து அசுரர்களை அழித்தபோது அதிலிருந்து விழுந்த சிறுதுண்டு தான் இந்த சிவன் மலை எனும் புராணக் கதை உண்டு. இந்த மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி பக்தர்களின் கனவில் வந்து உத்தரவு தருவாராம். அப்படி உத்தரவு தரும் பொருளுக்கும் நடக்கவிருக்கும் உலக நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். SHARE பண்ணுங்க!
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, திருப்பூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய <
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராபித்ரா பிஸ்வால் (47). இவர், திருப்பூர், பொங்கலூர் மீனாட்சிவலசில் உள்ள, பனியன் கம்பனியில், வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ராபித்ரா பிஸ்வால், மருதுரையான் வலசில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம் . அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம்,குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். மாரியம்மன் கோயில் தாராபுரம். தில்லாபுரியம்மன் கோயில் – தாராபுரம். சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.