India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம்,அவினாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூர் சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம் தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் அனில் (28) ஆகியோர் நேற்று மது அருந்திய நிலையில் பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனில், ஆகாஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற விக்கி புரோஜா (23) என்பவரும் காயமடைந்தார். வேலம்பாளையம் போலீசார் அனில் என்பவரை கைது செய்து விசாரணை!

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் (34). இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர், காசிபாளையம் அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சூரஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாட்டால் 2 மாதமாக அவரது மனைவி பேசவில்லை. இதனால் மனவிரக்தியில் சூரஜ்குமார் நேற்று(அக்.12) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink.
இதை உடனே அனைவருக்கும் SHARE! 

திருப்பூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

திருப்பூர்: ஆண்டிபாளையம் அருகே திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(51). இவருக்கு மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரைப் பிரிந்த மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், அவரது வீட்டிலேயே அவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர்: காங்கேயம் அருகே பொத்தியபாளையம், முத்துக்காளிவலசைச் சேர்ந்தவர் முருகேஷ் (45). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(அக்.11) அவரது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.