Tiruppur

News March 15, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை

image

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.

News March 15, 2025

திருப்பூர் அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மார்ச் 29ஆம் தேதி காலை 10.30 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

திருப்பூர்:பின்னலாடை தொழிற்கான அறிவிப்பு எதுவும் இல்லை

image

தமிழக அரசு பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கான அறிவிப்பு இடம்பெறாததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில கோரிக்கையின் போது திருப்பூருக்கு ஏதாவது அறிவிப்பு வருமா என தொழில் துறையினர் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால் தனியாக பின்னலாடை தொழிலில் உள்ள நிறுவனங்களின் கோரிக்கைகள் இடம் பெறவில்லை என தெரிவித்தனர்.

News March 14, 2025

தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி கோயில்!

image

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.

News March 14, 2025

திருப்பூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று மார்ச் 13 இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும்.

News March 14, 2025

திருப்பூர் பொதுமக்களுக்கு தொலைப்பேசி எண் அறிவிப்பு 

image

திருப்பூர் மாவட்ட முழுவதும் உங்கள் பகுதியில் உள்ள மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை இனி வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம் என மண்டலங்கள் வாரியாக எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவித்துள்ளன. அந்த வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் 0091 9442111912 பொதுமக்கள் இனி வரும் காலங்களில் இருந்த இடத்தில் இருந்தே புகார் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பு.

News March 14, 2025

திருப்பூருக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ திருப்பூரில் அன்புச் சோலை மையங்கல்.
▶ திருப்பூரில் கூட்டு கூடுநீர் திட்டம்.
▶ திருப்பூர்-காங்கேயம்- புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
▶ பல்லடத்தில் செமி கண்டக்டர். (Share பண்ணுங்க)

News March 14, 2025

திருப்பூரில் குற்றத்தடுப்பு தீவிரம்: 14,000 கண்காணிப்பு கேமரா 

image

திருப்பூர் போலீசார் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவிநாசியில் பழனிசாமி-பர்வதம் தம்பதி குடும்ப தகராறில் உறவினரால் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளி கைது செய்யப்பட்டார்.மாவட்டம் முழுவதும் 14,000 ‘சிசிடிவி’ கேமரா அமைக்கப்பட்டுள்ளன.பல்லடம், காங்கயத்தில் 25 துப்பாக்கி ஏந்திய ரோந்து குழுக்கள் செயல்படுகின்றன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிப்பு.

News March 14, 2025

திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களே உடனே பதிவு செய்யுங்க. Share பண்ணுங்க.

News March 13, 2025

ரோந்துபணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!