India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாநகரின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், இரவு நேரங்களில் காவலர்கள் வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய நிலையில் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், இரவு நேர ரோந்து பணியில் இன்றைய தினம் மாநகர குற்ற பிரிவு காவல் உதவியாளர் அனில் குமார் தலைமையிலான போலீசார் இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள  Accounts Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <

திருப்பூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

1)திருப்பூர் மாவட்ட இணையதளம்: https://tiruppur.nic.in/ta/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)திருப்பூர் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/about-us/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்https://tiruppur.dcourts.gov.in/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீசார் முத்தூர் சாலையில் நேற்று அக்.13 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அவர் முத்தூர், பெருமாள்புதூரைச் சேர்ந்த செந்தில் (58) என தெரியவந்தது. இதையடுத்து, செந்திலைக் கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் மேலாண்மை காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதி ரமேஷ்-அங்காள ஈஸ்வரி (வயது 25). சில நாட்களுக்கு முன் இவர்களின் 4 மாத ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டது. இந்நிலையில் வேலைக்காக தம்பதி, வேடசந்தூரில் இருந்து திருப்பூர் தளவாய்பட்டினத்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு குழந்தை இறப்பால் மனஉளைச்சலில் இருந்த அங்காள ஈஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரண நடத்தி வருகிறார்.

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் ரயில் நிலையம் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமாக கிடந்த பையை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அந்த பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாநகர மதுவிலக்கு போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்தது யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.