Tiruppur

News March 31, 2025

திருப்பூர்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

திருப்பூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

இடுவாய் சித்தி விநாயகர் கோயில்!

image

திருப்பூர், இடுவாயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து, குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார். பின்னர் 1995ஆம் ஆண்டு ஊர் மக்கள், சித்தி விநாயகருக்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். சக்திவாய்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இதனால் இங்கு வெளியூர்களில் இருந்து வந்து, பக்தர்கள் விநாயகரை தரிசிக்கின்றனர்.

News March 30, 2025

அவிநாசி புதிய நகராட்சி

image

அவிநாசி புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News March 30, 2025

திருப்பூர்: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா!

image

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2ஆவது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும் என்றார். இந்த நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாதவர்கள் மார்ச்.31க்குள் செலுத்தவும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே இதில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)

News March 29, 2025

திருப்பூரில் தரிசிக்க வேண்டிய அம்மன் கோயில்கள்

image

கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். கன்னிகாபரமேஸ்வரி கோயில் – திருப்பூர். செளடாம்பிகை அம்மன் கோயில் – திருப்பூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். செல்லாண்டியம்மன் கோயில் – தெற்கு அவிநாசிபாளையம். இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News March 29, 2025

ரூ.18 கோடியில் விளையாட்டு மைதானம்

image

திருப்பூரில் திறந்த வெளி விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.18 கோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக சிக்கண்ணா கல்லூரியில் 11 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. தடகள மைதானம் உருவாகும் முன்னரே பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டது.

News March 29, 2025

வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க

image

திருப்பூர், பல்லடம் அரசு கல்லூரியில் இன்று (மார்ச்.29) நடக்கவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில், 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறாலம். இம்முகாம் காலை 10.30 முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. (SHARE பண்ணுங்க.)

News March 28, 2025

திருப்பூர்: இராமயண காலத்து கோயில்

image

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு இருந்த சிவனை வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.

News March 28, 2025

சக்தி வாராஹி அம்மன் கோவில் பற்றி தெரியுமா?

image

உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நடைபெறும். இவ்விழாவிவின் முதல் நாள் நிகழ்வாக காலை கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹூதி நடைபெறும்.மாலை சங்கல்பம், கலச வழிபாடு, பூர்ணாஹூதி நடைபெறும். இக்கோயில் சென்று வழிப்பட்டால் கேட்ட வரத்தை அம்மன் அருள்வார். ஷேர் செய்யவும்.

News March 28, 2025

+2 மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு +2 பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் & வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் & ஆலோசனை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 240ல் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது  என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!