Tiruppur

News March 19, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டம்: திருப்பூர் 2ம் இடம்

image

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2வது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)

News March 19, 2025

பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்ட பதிவு நீட்டிப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ் மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை பதியலாம்.

News March 19, 2025

கிராம சபை கூட்டம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

image

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருகின்ற 23ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால், மார்ச் 23ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ஆம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2025

திருப்பூர்: காரில் 500 மீ இழுத்து செல்லப்பட்ட பெண் பரிதாப பலி

image

கோவை அருகே சரவணம்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி (40) ஸ்கூட்டரில் சென்றபோது, பல்லடம் அருகே ஒரு கார் மோதியது. இதில், அவர் காரின் முன்பகுதியில் சிக்கி, அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அருகில் பைக்கில் வந்த கிருஷ்ணகுமார் (34) லேசான காயமடைந்தார். பொதுமக்கள் காரை பிடித்து நேற்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரை ஓட்டிய சதீஷ்குமாரை (40) விசாரித்து வருகின்றனர்.

News March 18, 2025

இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், தங்களது பகுதியில் இன்று, 18.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம், சேவூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூரில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பெருமளவில் உள்ளனர். அவர்களுக்காக வரும் 20ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலை 10 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு 04212248524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

News March 18, 2025

திருப்பூர்: கிராம சபை கூட்டம் 23ஆம் தேதி நடைபெறுகிறது

image

உலக தண்ணீர் தினம் மாலை வருகின்ற 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை பற்றி விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது

News March 18, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புதுறை (ம) தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் 29ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்றலாம். வேலை இல்லாதவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் Share பண்ணுங்க.

News March 18, 2025

ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக; 272 பேர் கைது

image

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில் அங்கேரிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 272 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 17, 2025

திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ரன் குமார் (21). இவர் அம்மாபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். திருப்பூர் கோட் செட் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!