Tiruppur

News July 4, 2025

திருப்பூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News July 4, 2025

திருப்பூர்: ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி

image

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, விரைவில், Hair cut, Facial, Skin care, உள்ளிட்ட, ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி தொடங்குகிறது. மேலும் பயிற்சி, சீருடை, உணவு, விடுதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 4, 2025

ரிதன்யா தற்கொலை: ஜாமீன் வழக்கு 7-ம் தேதிக்கு ஒத்துவைப்பு

image

அவிநாசி பகுதியில் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்க்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக இடையீட்டு மனு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News July 4, 2025

திருப்பூர் காவல்துறையினர் வெற்றி

image

மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணி திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் நடைபெற்றுள்ளது. இதில் திருப்பூர் மாநகர காவல் துறை ஒட்டுமொத்த அளவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சுழற்கோப்பை வென்றுள்ளது. கணினி வழி குற்ற ஆய்வகப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கனகவல்லி கைரேகை மேம்பாடு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டி பரிசு வழங்கினார்.

News May 8, 2025

மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.05.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை,பல்லடம், தாராபுரம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News May 7, 2025

திருப்பூர்: முக்கிய காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

image

▶️திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) -9498101320. ▶️திருப்பூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9498104755, 0421-2970013. ▶️அவிநாசி DSP – 8300037777. ▶️பல்லடம் DSP – 8300043050. ▶️உடுமலைப்பேட்டை DSP – 8072519474. ▶️தாராபுரம் DSP – 9443808277, 04258-220325. ▶️காங்கேயம் DSP -7397027979, 04257-230883. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

BREAKING: திருப்பூரில் இளம்பெண் கொலை

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 7, 2025

திருப்பூரில் பள்ளியில் வேலை

image

திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள TGT, PGT, Clerk, Ward Boy பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 10th, 12th, B.Ed, B.P.Ed, B.Sc, BA, Diploma, M.Sc, MA, MBBS, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பவளம் ரூ.22,000 முதல் ரூ.47,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே.17 ஆகும். (SHARE பண்ணங்க)

News May 7, 2025

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

திருப்பூரைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் கமலேஷ் (14). வெள்ளகோவில் அருகே கள்ளமடை பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் உறவினர்களுடன் சேர்ந்து அங்குள்ள செயல்படாத கல் குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது சிறுவன் கமலேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 7, 2025

திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில்!

image

திருப்பூர் அவிநாசியில், பழமையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், நவகிரக தோஷங்கள் நீங்குமாம். பிரதோஷம், அமாவாசை, சித்திரை திருவிழா தினங்களில் இங்கு சென்று வழிபட்டால், திருமணத்தடை நீங்குவதோடு, குடும்ப ஒற்றுமை அதிகரித்து, பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்களாம். திருமணத்தடை, குடும்ப பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை Share பண்ணுங்க.

error: Content is protected !!