Tiruppur

News March 9, 2025

இந்து முன்னணியினர் 300 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அபிராமியம் பகுதியில் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை செய்ததை இந்து முன்னணி நிர்வாகிகள் விசாரிக்க சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 300 பேரை நேற்று கைது செய்தனர்.

News March 9, 2025

கால்நடை கணக்கெடுப்பு – 93% சதவீத பணிகள் நிறைவு

image

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர். கடந்த, அக்., மாதம் துவங்கிய இப்பணி, கடந்த மாதம், 25ம் தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இம்மாதம் கடைசி வரை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை, 93 % கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது என தெரிவிக்கபட்டுள்ளது.

News March 9, 2025

திருப்பூர்: காலவதியான 240 லிட்டர் குளிர்பானம் அழிப்பு

image

திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாவட்டம் முழுவதும், அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். கோடைகாலம் துவங்கியுள்ளதால், பழக்கடைகள், ஜூஸ் விற்கும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடந்த ஆய்வில், காலாவதியான பிறகும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 240 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டது அவற்றை தரையில் கொட்டி நேற்று அழிக்கப்பட்டன.

News March 9, 2025

உணவு பஞ்சம் உருவாகும் அபாயம்: விவசாயிகள் குமுறல்

image

பல்லடம் அருகே வேளாண்துறை சார்பில், வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாணிக்காபுரம் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குனர் அமுதா தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் இன்றைய தலைமுறைகள் விவசாயத்துக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கிடையே, விவசாய பணிகளுக்கு கூலி தொழிலாளர்கள் இன்றி, நம் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

News March 8, 2025

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழ வியாபாரி பலி

image

காங்கயம் – கோவை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (65). இவர் தாராபுரம் சாலையில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தாராபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 8, 2025

திருப்பூரில் ரூ.99 லட்சம் பரிசு அறிவிப்பு

image

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

News March 8, 2025

திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

image

இந்துக்கள் கோயில் கட்ட ஜமாத் அமைப்பினர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்டுவதற்கு, தானமாக நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள், குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். 

News March 8, 2025

வாழ்த்திய திருப்பூர் மாவட்ட பாஜக தலைவி

image

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணக்குமார் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

திருப்பூர்: ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

திருப்பூரில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க

News March 7, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!