India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூலை 12, 13) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்க 2 கோடி 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கட்டுமான பணிகளை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டுதோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்யும் பணி பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்றுவருகிறது. அதன்படி, வெங்காயத்திற்கு ரூ.2,227.50, மஞ்சளுக்கு ரூ.4,247.50, தக்காளிக்கு ரூ.1495, வாழைக்கு ரூ.3920.20 மரவள்ளிக்கு ரூ.1720 என உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் சர்தார் படேல் விருது தேசிய ஒற்றுமை தினமான அக்டோபர் 31ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்காக பங்களிப்பு செலுத்தியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளோர் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தில் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி இன்று துவக்கி வைத்தனர். அப்போது பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஆட்சித்தலைவர், பொள்ளாச்சி எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது. பாராட்டத்தக்க வகையில் வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு வகைகளில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் award.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவி அபர்ணாஸ்ரீ வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழாவில் கவிதை, பேச்சு, சிற்பம், நடனம், நாடகம் என பல்வேறு கவின்கலை போட்டிகள் உள்ளன. இதில் மாணவி அபர்ணாஸ்ரீ கவிதை போட்டியில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து கல்வி அமைச்சரால் பாராட்டப்பட்டார்.
திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி உள்ளிட்டர் கலந்துகொண்ட கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்களை தொழில் முனைவோராக்கும்
திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் 100 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் துவங்க
ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டு மானியத்துடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.