India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம், குறு, சிறு, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு, பவர் டில்லர் பெறுவதற்கு, அதிகபட்சம் 1.20 லட்சம் ரூபாய்; களையெடுப்பான்களுக்கு அதிகபட்சம் 63 ஆயிரம் ரூபாய், அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

பல்லடம், சேமலைகவுண்டம்பாளையம் 3 பேர் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு, நேரில் சென்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி அர்ஜுன் சம்பத் ஆறுதல் தெரிவித்தார். மேலும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை, கடுமையான தண்டனையான என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று, ஆவேசமாக பேட்டியளித்தார். மேலும் பல்லடத்தில் இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் பொருட்களை வைத்தல், வாகனங்களை இயக்கு தல், நீண்ட நேரம் தண்டவாளத்தில் பிரவேசித்தல், சாகசங்களை செய்து வீடியோ எடுத்தல், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் போன்ற சாகச ரீல்ஸ் எடுப்போர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு இமாச்சல் பிரதேசம் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மழை காரணமாக வரத்து குறைந்து இருப்பதால் பூண்டு விலை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி சைனா பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சைனா பூண்டு, கண்டறியப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறையால் 330 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்ட,ம் ஊத்துக்குளி அருகே, தொட்டிபாளையம் பகுதியில், ஒரு வீட்டில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, கட்டிடத் தொழிலாளி சுராஜித், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் இருந்த அவர், மன உளைச்சல் அடைந்து, அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர், உடுமலை துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சிசேரி, சின்ன வீரன் பட்டி, சங்கர் நகர் உட்பட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற பதிவேடுகளில் இருந்து 850 பேரின் விவரங்களை பெற்று அதனுடன் பொருத்தி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு கீழ் உள்ள கொங்கு நகர் உதவி ஆணையராக வசந்த ராஜ் இன்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் காவல் ஆணையரகத்தின் கீழ் வடக்கு, தெற்கு மற்றும் கொங்கு நகர் சரகம் என மூன்று உதவி ஆணையர்கள் உள்ள நிலையில் கொங்குநகர் பகுதி உதவி ஆணையராக இவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பல்லடம் அருகே செம்மலை கவுண்டன் பாளையம் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை வழக்கில், தற்போது போலிசார் 14 தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்கால் வழியாக வந்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதிய கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரை அருகே நேற்றைய தினம் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ராஜேஷ் என்பவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு, வாடகை காரில் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.