India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேவம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு திறமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த பரத் குமார்(21), முகேஷ் குமார்(34) மற்றும் சுப்பையா(46) என்பதும், கஞ்சா சாக்லேட் விற்றதும் தெரிய வர அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெருமாநல்லூர் போலீசார் கடந்த 27ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட 1025 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ராஜஸ்தான் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவரான ஜோராராம் குடோன் அவினாசி ராஜன்நகரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குடோனையும், பெருமாநல்லூரில் மாதாராம் என்பவரது மளிகை கடைக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சியில் உள்ள குளத்தில் பெண் மான் செத்து கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் செத்துக்கிடந்த மானின் உடலை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 2 வயதுடைய இந்த பெண் மானின் பின்பகுதியில் நாய்கள் கடித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளதாக கூறினர்.
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி இன்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 148 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ.7,906 வரையில் மட்டரக பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் சிவன்மலையில் உள்ளது புகழ்பெற்ற சுப்பிரமணியர் கோயில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலுக்கு படிகட்டுகள், சாலை வழியாகவும் இக்கோயிலை அடைய முடியும். சிவவாக்கியர் சித்தர் இங்கு தங்கி முருகனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இக்கோயிலிலேயே புகழ்பெற்ற உத்தரப் பெட்டி உள்ளது. இந்த பெட்டியினுள், பக்தரர்களின் கனவில் வந்து முருகன் குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்யவர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சோதனை மேற்கொண்ட போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (21), ஏய்ட்டான் மகன் தினேஷ் (23) ஆகியோரையும், பெருமாநல்லூரில் கேவரொம் (26) உள்பட ஏழு பேரை பெருமாநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் இளைஞர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் வடக்கு காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய செயலி மூலம் மாணவர்களை கண்காணிப்பது மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.