Tiruppur

News June 11, 2024

திருப்பூரில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் ராஜா ரா வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் மன செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

News June 11, 2024

தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடும் விழா

image

தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.குமாரபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி, தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் தாராபுரம் சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் நீதிபதிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

திருப்பூர் அருகே விபத்து: தம்பதி பரிதாப பலி

image

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி – சந்திரா தம்பதியினர். இவர்கள் தங்களது மகள் ஐஸ்வர்யாவுடன் வாடகைக்கு காரில் மேட்டூர் சென்று நேற்று மாலை திருப்பூர் திரும்பி வந்துகொண்டிருந்தனர். ஊத்துக்குளி அருகே வந்தபோது புலவர்பாளையத்தில் ஈரோடு நோக்கி சென்ற அரசுப் பேருந்து கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி மற்றும் சந்திரா உயிரிழந்தனர். ஐஸ்வர்யா சிகிச்சை பெற்று வருகிறார்.

News June 10, 2024

டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வாமலை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். மது போதையில் இருந்த அவர் இன்று மதியம் திடீரென அப்பகுதியில் இருந்த 45 அடி உயரமுள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குன்னத்தூர் போலீசார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சுரேஷை கீழே இறங்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 10, 2024

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 280 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 280 மனுக்களை அளித்துள்ளனர்.

News June 9, 2024

திருப்பூர்: பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கிய திமுக

image

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நல்லூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இன்று அசைவ உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவினை வழங்கினார்.

News June 9, 2024

மலைத்தேனீக்கள் கடித்து ஒருவர் பலி

image

காங்கேயம் அருகே முள்ளிப்புரம், எலந்தக்காட்டுபதியை சேர்ந்தவர் முருகேசன் (59), தேங்காய் மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று கிளாங்காட்டுவலசில் துரைசாமி என்பவரது தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் போது, மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கடித்துள்ளது. பெருந்துரை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 9, 2024

பல்லடத்தில் ரத்ததான முகாம்

image

பல்லடம் வனம் அமைப்பு, திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் பொன்னி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறிவதற்கான இலவச மருத்துவ முகாம் ஆகியவை, வனாலயம் அடிகளார் அரங்கில் நேற்று நடைபெற்றது. ரத்ததான முகாமில், மொத்தம் 29 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.

News June 8, 2024

ரயிலில் அடிபட்டு தாய் மகன் உயிரிழப்பு

image

திருப்பூர் வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகே இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 12 வயது மதிக்கத்தக்க சிறுவனும் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 8, 2024

தாராபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

தாராபுரம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜே பீட்டர் கோட்டத் தலைவர் தலைமை தாங்கினார். மேலும் க.செந்தில்குமார் கோட்டச் செயலாளர் விளக்க உரையாற்றினர்.

error: Content is protected !!