India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு 10 லட்சம் முதல் அதிகபட்ச 5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுவதால் தகுதி உள்ளோர் msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து இதுவரை தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்காத மற்றும் தனியார் கல்லூரிக்கு விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்காத மாணவ மாணவிகள் இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை
4 நாட்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்
705ல் உயர்கல்வி உதவி வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் பயன்பெறுமாறு ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு கூடங்களில் தேர்வு பணியில் தனிப்படைகள், கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண்மை விரிவாக சேவைகளில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டய படிப்பு நடைபெற்று வந்தது. இந்த படிப்பில் தேர்ச்சி பெற்ற 34 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் கலந்துகொண்டு பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
சர்வதேச அளவில் உலக மக்கள் தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்திய விமான படையால் நடத்தப்படும் அக்னிவீர் வாயு தேர்வு வரும் அக்டோபர் 18ஆம் தேதி இணைய வழியாக நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி தேதியாகும். எனவே இந்திய விமானப்படையில் பணியாற்ற ஆர்வமுள்ளோர் தேர்வில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூலை 12, 13) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்க 2 கோடி 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கட்டுமான பணிகளை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டுதோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்யும் பணி பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்றுவருகிறது. அதன்படி, வெங்காயத்திற்கு ரூ.2,227.50, மஞ்சளுக்கு ரூ.4,247.50, தக்காளிக்கு ரூ.1495, வாழைக்கு ரூ.3920.20 மரவள்ளிக்கு ரூ.1720 என உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.