India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூரைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புருஷன் எனக்கு அரசன், ரோஜா மலரே , சிந்துபாத் , தீ இவண் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகி திருப்பூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார் நிலையில், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று காலை அவரது இறுதிச்சடங்குகள் திருப்பூரில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள், முத்தூர் சுற்றுவாட்டாரப் பகுதிகள், காங்கேயம், அகஸ்திலிங்கம் பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் – கோவா, ஸ்பார்க்கிள் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகளுக்கு இடையே, முதல் அரையிறுதி போட்டியும், ஐதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி – கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணி இடையே இரண்டாவது அரையிறுதி போட்டியும் இன்று நடக்கிறது. வெற்றி பெறும் அணிகள், கோப்பைக்கான இறுதி போட்டியில் மோதும். தோற்கும் அணிகள், மூன்றாடமிடத்துக்கான போட்டியில் பங்கேற்கும்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்

திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வடக்கு போலீசார் நடத்திய ஆய்வில் பவானி நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த இம்ரான் ஹுசைன், நூர் நபி, ராபினி மோண்டல், ஷாஜகான், மோக்தர், ரபிகுல் இஸ்லாம், கபீர் ஹூசைன் என்ற 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர், திருமுருகன் பூண்டியை அடுத்த தேவாரம் பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் திருமுருகன் பூண்டி நகராட்சியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 1.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, 2வது ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. இவர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, நகரப் பேருந்தில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். வந்து பார்த்தபோது பையில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது பொங்கலுக்கு சொந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் (17ஆம் தேதி) இரவு முதல், 19ஆம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பூர் மண்டலப் போக்குவர்த்து கழகம் செய்து வருகிறது.

திருப்பூரில், பொங்கல் விடுமுறை காரணமாக, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், திருப்பூரில் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் நேற்று, வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு, 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளும் தொடர் விடுமுறையில் இருப்பதால், திருப்பூர் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.