Tiruppur

News August 25, 2024

திருப்பூரில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

image

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி குமரானந்தாபுரம் பகுதியில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார். மேலும் புதியதாக கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

News August 25, 2024

விஜயகாந்த் பிறந்தநாள்: திருப்பூர் மா.செ. ரத்த தானம்

image

திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று குளத்துப்பாளையம் பகுதிகளில் சுமார் 30 இடங்களில் கொடியேற்று விழாவும், அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

News August 25, 2024

திருப்பூரில் 21 மாணவ, மாணவிகள் MBBS படிக்க தேர்வு

image

நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த 31 பேர் பங்கேற்றனர். இதில் 21 பேர் எம்பிபிஎஸ் படிக்கவும், ஆறு பேர் பல் மருத்துவம் படிக்கவும் கல்லூரிகளை நேற்று தேர்வு செய்தனர்.

News August 25, 2024

குண்டாஸ்: திருப்பூர் கமிஷனர் அதிரடி

image

நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த சுபாஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சுபாஷ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்ததால் அவரை போலீஸ் கமிஷனர் லட்சுமி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News August 25, 2024

திருப்பூர் கலெக்டர் தலைமையில் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வருவாய் அலுவலர்களுக்கான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

News August 25, 2024

திருப்பூரில் பணி முன்னேற்றம் குறித்த கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வருவாய் அலுவலர்களுக்கான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

News August 25, 2024

திருப்பூரில் போலீசாரை பாராட்டிய போலீஸ் கமிஷனர்

image

திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் தொழில் பிரச்சனை காரணமாக குடும்பத்துடன் வீட்டைச் சென்ற மகனையும், அவரது குடும்பத்தாரையும் கண்டுபிடித்து தர வலியுறுத்தி மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காணாமல் போனவர்கள் வெளி மாநிலத்தில் இருப்பதை கண்டறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் மீட்டு குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை கமிஷனர் லட்சுமி பாராட்டினார்.

News August 24, 2024

திருப்பூரில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்

image

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் 1 பகுதியாக திருப்பூர்-காங்கேயம் சாலையில் தனியார் பள்ளி முன்பு இருந்து விஜயாபுரம் பகுதி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

News August 24, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤திருப்பூரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முக பாண்டியராஜன், சத்தி ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. ➤மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் வேளாண் வட்டார மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறுஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் துப்பாக்கி சுடும் போட்டியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். ➤முதல்வர் கோப்பைக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.

News August 24, 2024

கியாஸ் நுகர்வோர் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண் 120-ல் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!