Tiruppur

News January 24, 2025

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், ரேஷன் அட்டை புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான மனு அளிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டம்; 5200 பேர் சேர்ப்பு

image

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்து, செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான 8 % வட்டியுடன் 21 ஆண்டுகள் கழித்து ரூ.11 லட்சத்து 16 ஆயிரத்து 815 கிடைக்கும். இதைதொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் தற்போது இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 200 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர்.

News January 23, 2025

பீகார் செல்லும் தனிப்படை போலீசார்

image

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் மற்றும் ராணி குமாரி தேவி தம்பதியினர், திருப்பூர் ராயபுரம் அருகே குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகறாரில், தனது மனைவியான ராணி குமாரி தேவியை, கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டு, தலைமறைவானார். இந்த கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பீகார் மாநிலத்திற்கு தனிப்படை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

News January 23, 2025

திருப்பூர்: இளம்பெண் தற்கொலை!

image

பொங்கலூர் சோழியப்பகவுன்புதூரில் வசிப்பவர் முத்துலட்சுமி. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவருக்கும், அஜித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். கணவனை பிரிந்து தன்னுடன் வாழுமாறு, முத்துலட்சுமியை, அஜித் வற்புறுத்தியுள்ளார். மேலும் புகைப்படத்தை, கணவனிடம் காட்டிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

News January 23, 2025

திருப்பூர் புத்தக திருவிழா இன்று தொடக்கம்!

image

திருப்பூரில் 21வது புத்தக கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 140 ஸ்டால்களில் 75க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இந்த கண்காட்சி இன்று தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள, உங்கள் பிள்ளைகள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள செய்தியை share செய்யுங்கள். 

News January 23, 2025

திருப்பூரில் ஆறு கோள்களை பார்த்து ரசித்த மக்கள்

image

திருப்பூரில் வானில் ஆறு கோள்கள் நேர்கோட்டில் வந்துள்ளது. திருப்பூர் பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் பார்த்து ரசித்தனர். கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வட்டப்பாதையில் சுழன்றபடி, சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில சமயங்களில் கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வும் நடைபெறும். இதில் நேற்று வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யூரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன.

News January 22, 2025

ஆசிரியர் பணியிடை நீக்கம்

image

ஊதியூர் அருகே உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய சிவக்குமார் (54), 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிவக்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆசிரியர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உதயகுமார் உத்தரவிட்டார்.

News January 22, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது 

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவர் சண்முகம் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் சிறுமியின் தாயாருக்கு உதவி செய்வது போல் வந்து மகளிடம் அத்துமீறியதாக தாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

News January 22, 2025

திருப்பூரில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா திறப்பு!

image

திருப்பூர் ஊத்துக்குளி சாலை ரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வரும் 24ஆம் தேதி பாஸ்போர்ட் சேவா கேந்திரா துவங்கப்படவுள்ளது. இனி திருப்பூர் மக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிக்காக, கோவை சென்று வரவேண்டியது இல்லை. பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் உள்ளிட்ட முதல் கட்டப்பணிகள், டோக்கன் வழங்குதல் உள்ளிட்டவை, இம்மையம் மூலமாகவே மேற்கொள்ளப்படும்.

News January 22, 2025

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

image

திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திக் வயது 35. வணிக நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான கார்த்திக், அடிக்கடி மது குடித்துவிட்டு, திருமணத்தை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் மன வேதனையில் இருந்த கார்த்திக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!