India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (18.10.24) காலை 10.30 மணிக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்தில் 4வது தளத்தில் அறை எண் 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறியிருந்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஎன்பிசி குருப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அக்.18ஆம் தேதி(நாளை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் முதன்மை தேர்வு நடைபெறும் வரை தொடர்ந்து மாதிரித் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9499055944 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், உடுமலையில் உரங்களின் விலை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி மாவட்ட அளவிலான உர கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு விதிமுறை செயலாகும் எனவே கூடுதல் விலைக்கு உரம் விற்பனையாளர்கள் யாராவது உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில், கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது உணவு பாதுகாப்பு மற்றும் தர உரிமம் சட்டத்தை மீறிய 12 கடைகளுக்கு அபராதமாக ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர், உடுமலையில் நடப்பாண்டில் தீவன பெருக்க திட்டத்தில் மாடுகளில் பால் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முதலமைச்சர் உத்தரவுபடி தீவன பெருக்கு திட்டம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளக்கபடும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) இருந்த பக்தவச்லம் கரூர் மாவட்டத்திற்கும், தாராபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகதீசன் திருவண்ணாமலைக்கு இடமாற்றப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் மணக்கடவு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக இடைநிலை நியமிக்கப்பட்டுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக முழுவதும் பருவமழை தொடங்கி கனமழையாக பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து துறையினரும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் மழை வெள்ளம் மீட்பு கட்டுப்பாட்டு அறை எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி் மலையில் உள்ளது பஞ்சலிங்க அருவி.தற்போது அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் தடுப்புகளை தாண்டி விழுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு் உள்ளது.எனவே திருமூர்த்தி மலை கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாவிற்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி பாளையம், காரணம்பேட்டை, கரடிவாவி, ஆறுமுத்தாம்பாளையம், காமநாயக்கன்பாளையம், டி கே டி மில் ,சின்னக்கரை, கணபதி பாளையம், லட்சுமி மில் ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.