Tiruppur

News October 19, 2024

பொது இடங்களில் புகைப்பிடித்த 69 பேருக்கு அபராதம்

image

பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது. அருகில் உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இளம் சிறார்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடிய வகையில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகரில் இன்று ஒரே நாளில் பொது இடங்களில் புகைபிடித்ததாக 69 பேருக்கு போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். முதலில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 19, 2024

ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் இன்று (19.10.24) நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு (ம) மாற்றம் செய்தல் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இம்முகாம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெறும். எனவே திருப்பூர் மக்களே மிஸ் பண்ணிடாமா SHARE பண்ணுங்க.

News October 19, 2024

உடுமலைக்கு முன்னாள் முதல்வர் வருகை

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன் பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது .இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளார் என அதிமுக ஓபிஸ் அணி உடுமலை நகர செயலாளர் லயன் நடராஜன் தெரிவித்தார்.

News October 18, 2024

காங்கயம் அருகே போக்சோ வழக்கில் கைது

image

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் வசித்து வருபவர் கார்த்தி (23) இவர் அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் கார்த்தியை இன்று போலீசார் கைது செய்தனர்.

News October 18, 2024

கன்னிவாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

திருப்பூர்: கன்னிவாடி அடுத்த ஆனங்கூர் பகுதியில் இன்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் இடது புறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் பயணித்த அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2024

உடுமலையில் கும்பாபிஷேக விழா

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமணலிங்க நாடார் வீதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களாக வர்ணம் பூசி சொல்லிட்டு பணிகள் நடைபெற்ற பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 21ஆம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை(19.10.24) நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு (ம) மாற்றம் செய்தல் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே திருப்பூர் மக்களே மிஸ் பண்ணிடாமா SHARE பண்ணுங்க.

News October 18, 2024

பல்லடம் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான Under 18 பிரிவு கால்பந்துப் போட்டியில், பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் முதலிடம் பிடித்த மாணவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

News October 17, 2024

அமராவதி ஆற்றில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் தனியார் உணவக டெலிவரி வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் இன்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!