Tiruppur

News November 2, 2024

தாராபுரத்தில் அமைச்சரை கண்டித்து ஆர்பாட்டம்

image

தாராபுரம் முஹம்மதியா நகர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தும், வாக்குறுதியை நிறைவேற்றாத அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோரை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் வருகிற 7 ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகில் நடைபெற உள்ளதாக தாராபுரம் முஹம்மதியா நகர் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

திருப்பூர்: சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவலர் உயிரிழப்பு

image

தாராபுரம் பெரமியத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வுபெற்ற காவலர். தனது இல்லத்தில் இருந்த நிலையில் இரவு 1 மணி அளவில் திடீரென இதய வலி ஏற்பட்டு தனது மகள் மனைவியுடன் காரில் மருத்துவமனைக்கு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அமராவதி ஆற்று பாலம் பள்ளத்தில் இறங்கியது. தீயணைப்பு துறையினர் காரை பத்திரமாக மீட்டனர். இதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 1, 2024

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

image

தீபாவளிக்கு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லவும், இன்று அமாவாசை நாள் என்பதால் பழனி, சிவன்மலை உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு செல்லவும் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

News November 1, 2024

திருப்பூரில் கனமழை: சுவர் இடிந்து 4 பேர் காயம்

image

திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கன மழையின் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சென்றது. இதில் திருப்பூர் காங்கேயம் சாலையை காங்கேயம்பாளையம் புதூர் பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் குமார் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் காயங்களுடன் தப்பினர்.

News November 1, 2024

மீண்டும் வருமா மழைநீர் சேகரிப்பு திட்டம்?

image

திருப்பூரில் இல்லங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில், மழைநீர் சேகரிப்பு என்பது மாயமாகியிருக்கிறது. சிறிய மழைக்கே வெள்ளக்காடாக மாறுகிறது. திருப்பூர் நகர, ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்படுகின்றது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

News October 31, 2024

திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு 

image

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அழகு சுந்தரம், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறிய நிலையில் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்ததால் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

News October 31, 2024

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மழை

image

தீபாவளி திருநாளான இன்று அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

தீபாவளி: மக்களே கவனமா கொண்டாடுங்க!

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட திருப்பூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!

News October 30, 2024

தாராபுரம் அருகே பள்ளத்தில் இறங்கிய கார்

image

தாராபுரம் அடுத்து உள்ள குள்ளாய் பாளையம் அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக காரில் சொந்த ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இருந்த மரத்தில் மோதிநின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை நீண்ட போராட்டத்திற்கு பின் கார் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது.

error: Content is protected !!