India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.

அதிமுக நிர்வாகிகள் பங்கு பெறும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையிலான அனைத்து கழக மாவட்டங்களும் ஒரே சமயத்தில் இணையும் காணொளி கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த காணொளி கலந்தாய்வு கூட்ட நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கரூர் சாலையில் உள்ளது வீரணம்பாளையம். இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே திருப்பூரில் இருந்து கரூர் செல்ல 20 பேருடன் வேன் இன்று மாலை சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த 15 பேர் லேசான காயமடைந்தனர். பின் அவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர் 43வது வட்ட திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 1,072 பேருக்கு அறுசுவை கிடா விருந்து வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார். இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அபிராமியம் பகுதியில் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை செய்ததை இந்து முன்னணி நிர்வாகிகள் விசாரிக்க சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 300 பேரை நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர். கடந்த, அக்., மாதம் துவங்கிய இப்பணி, கடந்த மாதம், 25ம் தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இம்மாதம் கடைசி வரை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை, 93 % கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது என தெரிவிக்கபட்டுள்ளது.

திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாவட்டம் முழுவதும், அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். கோடைகாலம் துவங்கியுள்ளதால், பழக்கடைகள், ஜூஸ் விற்கும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடந்த ஆய்வில், காலாவதியான பிறகும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 240 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டது அவற்றை தரையில் கொட்டி நேற்று அழிக்கப்பட்டன.

பல்லடம் அருகே வேளாண்துறை சார்பில், வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாணிக்காபுரம் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குனர் அமுதா தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் இன்றைய தலைமுறைகள் விவசாயத்துக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கிடையே, விவசாய பணிகளுக்கு கூலி தொழிலாளர்கள் இன்றி, நம் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

காங்கயம் – கோவை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (65). இவர் தாராபுரம் சாலையில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தாராபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.