India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூரில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <

திருப்பூர், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30ஆவது வார்டுகளிலும் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து நகர் மன்ற கூட்டம் அறையில் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 56 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். <

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

திருப்பூர் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள உணவகத்தில் 24 மணி நேரமும் முறைகேடாக மதுக்கடை அமைத்து மது விற்பனை நடைபெற்று வருகின்றது. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதியில் அர்பன் வங்கி அனுஷம் திரையரங்கம் பின்புறம் பஸ் நிலையம் ராஜேந்திர ரோடு பகுதியில் பேரணி முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு மார்ச் 12 முதல் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுநிலை தகுதி, மருத்துவ தகுதி நிலை, உடற்தகுதி நிலை, விதிமுறைகள், நிபந்தனைகள், இணையதள விண்ணப்பங்கள் நிரப்புவதற்கான மற்றும் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு பற்றி விரிவான தகவல்களை www.joinindianarmy.nic.in இணையத்தில் பதிவுசெய்ய என திருப்பூர் கலெக்டர் அழைப்புவிடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.