India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் 2024-25ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் அறை எண் 113இல் விண்ணப்பம் பெற்று இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
பல்லடத்தை சேர்ந்தவர் செல்வமணி (46). பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரம் செய்து வந்தார். பல்லடம் வணிகவரித்துறை அலுவலகத்தில், கடந்த 2010ல், செல்வமணி புதிய ஜி.எஸ்.டி எண் வாங்க விண்ணப்பித்தார். வணிகவரி உதவி அதிகாரி சேமகுமார் (55), லஞ்சம் கேட்டதாக புகாரளிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செல்லதுரை தீர்ப்பு வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்படுத்தும் பொருட்டு மழை நீரை குளம், குட்டைகள், பொதுக்கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் செறிவூட்டும் திட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பின்னலாடை சாம்ராஜ்யம் ஆண்டுக்கு சுமார் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆகி வருகிறது. கடின உழைப்பாலும் பொருட்களை விட முயற்சிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நகரம் என்ற சாதனை புரிந்துள்ளது. திருப்பூரில் முதல் முறையாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை செயல்படுத்திய நகரம் என்ற பெருமையும் வரலாறும் இருக்கிறது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் குமரன் ரோடு 6 மி.மீ, கலெக்டர் அலுவலக பகுதியில் 3 மி.மீ, ஊத்துக்குளியில் 10.80 மி.மீ, மூலனுரில் 19 மி.மீ, நல்லதங்காள் ஓடை பகுதியில் 12 மி.மீ, காங்கேயம் பகுதியில் 5 மி.மீ, வெள்ளகோவிலில் 6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 81.மி.மீ மழை பதிவானது.
திருப்பூர் வாவிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 6 முதல் +2 வரை, 581 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கு தனித்தனி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மதியம், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இணைந்து சமைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் பரிமாறினர். ஆசிரியர்கள் சமைத்த உணவை மாணவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடும் மழலை அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் என திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ..ஆனால், மழலை குழந்தை சிரிப்பில் தினந்தோறும் பூக்கின்றன குறிஞ்சி.. குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..! என சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையளராக பணியாற்றி வந்த பவன்குமார் கிரியப்பனவர் பணியிடமாறுதல் பெற்றுச் சென்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பணி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதியதாக அறிவிக்கப்பட்ட ராமமூர்த்தி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 17 மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் செய்ததாக விடுதி காப்பாளர் சரண் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளை பாலியல் செய்தது ஈடுபட்ட போது அதற்கு உறுதுணையாகவும் இருந்த மேலும் இரண்டு பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம் போல வாடி சாலையில் உள்ள தனியார் பள்ளி 17 மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு சீல் வைக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.