India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
ஜோலார்பேட்டை சின்னபொன்னேரியை சேர்ந்தவர் சிவா – லலிதா தம்பதியின் 7 வயது மகள் கனிஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது தவறுதலாக 5 ருபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். மயக்கமடைந்த சிறுமியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர் தீபானந்தன் விடுப்பில் இருந்த போதும் மருத்துவமனைக்கு வந்து எண்டோஸ்கோபி மூலம் சிறுமியை காப்பாற்றியுள்ளார். தன்னலமற்ற அவரை பாராட்டலாமே!.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது மிதவேகத்தில் செல்வோம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம் என வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் வெளியாகிவுள்ளது. ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்ணை அழைக்கலாம்.
தமிழ் கடவுள் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். எனவே திருப்பத்தூரில், ஜலகம்பாறை முருகன் கோயில், பசிலிகுட்டை முருகன் கோயில், மயில் பறை கோயில் உள்ளிட்ட அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்லலாம். வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டும். மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர், கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (27). இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாராயணபுரத்தில் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வராததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார், வாணியம்பாடி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் முனீர் அஹமத் (56). இவர் நேற்று மதியம் தன்னுடைய இ-பைக்கை, வீட்டின் போர்டிகோவில் சார்ஜிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக இ-பைக் எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து, உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று ஏப்ரல் 12) இரவு) ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.
Sorry, no posts matched your criteria.