Tirupathur

News April 1, 2024

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பேனர்

image

ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் சிறிய வகை வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே திறக்கப்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் செல்வதால் மேம்பாலம் பாதிக்கும் வகையில் உள்ளது. நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வலியுறுத்தி பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 1, 2024

திருப்பத்தூர் அருகே பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

image

வாணியம்பாடி பகுதியில் வேலூர் திருப்பத்தூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நியூடவுன் பஸ் நிறுத்தம் அருகே பெண்ணின் பையை மர்ம ஆசாமிகள் யாரோ பறித்து சென்றனர்.அப்போது அந்த பெண் கூச்சல் போடவே அங்கிருந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.இதனால் அந்த பையில் வைத்து இருந்த 7 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது வாணியம்பாடி போலிசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2024

ஆம்பூர் அருகே பயங்கர தீ விபத்து!

image

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் சென்னை பெங்களூர் சாலையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென அருகில் இருந்த டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் மீது மர்மநபர்கள் சிலர் இன்று தீ வைத்ததால் சாலையில் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.

News April 1, 2024

திருப்பத்தூர்: சாராயம் கடத்தியவர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் திருப்பத்தூர் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் (47) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை

image

வேலூர் அருகே மேல்பட்டியை சேர்ந்தவர் சசிலேகா (19) இவர் அதே பகுதியில் வசித்து வரும் வாலிபரை காதலித்து வந்த நிலையில் உறவினரான தாய்மாமனை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இன்று (ஏப்.1) மேல்பட்டி வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலப்புழா – சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வடச்சேரி ஊராட்சி கூட்டு ரோட்டில் நேற்று மாலை (மார்ச்.31) சின்னப்பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ரியாஸ் (50)  என்பவரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பிரபு படுகாயங்களுடன்  வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்

News April 1, 2024

கோழி குஞ்சு உற்பத்தி நிறுவனம் மூடல்

image

கொரோனாவிற்கு பின் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி 1½ ஆண்டாக நிறுத்தப்பட்டதால் ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் கார்டன் பராமரிப்பு, எந்திரங்களை சுத்தம் செய்வது முதலிய வேலைகள் வழங்கப்பட்டன. நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் ரூ. 3.50 லட்சம் செட்டில்மென்ட் தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் நிர்வாகம் செலுத்தி உள்ளது. மீண்டும் வேலை வழங்க வேண்டும் என ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News March 31, 2024

திமுக நிர்வாகி தந்தை மறைவு: எம்எல்ஏ ஆறுதல்

image

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், சின்னவேப்பம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சேகரின் தந்தை ரேணு இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில்
மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

News March 31, 2024

திருப்பத்தூரில் எடப்பாடி பிரச்சாரம்

image

திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2 ஆம் தேதி திருப்பத்தூர் அவுசிங் போர்டு காந்தி சிலை அருகே திறந்த வேனில் பிரச்சாரம் செய்கிறார் என திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

திருப்பத்தூர் அருகே அரிவாள் வெட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் இரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (58). சொத்து பிரச்சினை காரணமாக முருகேசனை அவரது சித்தப்பா பேரன் மது மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து நேற்று அரிவாளால் வெட்டினர். இதில் தலை, முழங்கையில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!