Tirupathur

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தை சார்ந்த 65 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் இளநிலை படை அலுவலர்கள் (JCO), ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அனைத்து நாட்களிலும் அணுகலாம். மேலும், இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

திருப்பத்தூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் எவரேனும் சந்தேகப்படும்படி காணப்பட்டால் உடனடியாக தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9442992526 தகவல் தெரிவிக்க வேண்டும். அதை தவிர்த்து சக மனிதர்களை அடிப்பது,கட்டி வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.

News March 19, 2024

ஆம்பூரில் ரூ.80,500 பறிமுதல்

image

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று (மார்ச்.18) சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டாடா ஏ.சி வாகனத்தில் கே.வி குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபாலன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் மோகனிடம் ஒப்படைத்தனர்.

News March 18, 2024

ஆம்பூர் அருகே ராணுவ வீரர்கள் வாகனம் விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 2 மணிக்கு ராணுவ வீரர்கள் வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பல ராணுவ வீரர்களுக்கு காயமடைந்துள்ளனர்.

News March 18, 2024

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் புல எண்: 37ல், 3.18.50 பரப்பளவில் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் குடியிருப்பு அமைய உள்ளதாக அதற்கான ஆணைகளையும் விடப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள தென்னை மரம் 8 வேப்பமரம் 18 மற்றும் உள்ள மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 18, 2024

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் வலைதள பதிவில் இன்று வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், பொதுமக்கள் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

News March 18, 2024

திருப்பத்தூர் அருகே 9 லட்சம் பறிமுதல்

image

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

News March 18, 2024

திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் முதியவர் பலி

image

ஆம்பூர் அருகே ஜாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம்முல்லா (வயது 76). இவர் இன்று (மார்ச் 18) அதிகாலை 3 மணியளவில் ஆம்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாம்ராஜ் எக்ஸ்பிரஸில் தனது மகளை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென ஓடும் ரயிலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News March 18, 2024

திருப்பத்தூர்: பேரூராட்சி செயலர் மீது பாய்ந்த நடவடிக்கை.

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!