Tirupathur

News April 11, 2024

நாட்றம்பள்ளி: கட்சி பேனர் அகற்றம்

image

நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பாஜக கிழக்கு ஒன்றிய அலுவலகம் எதிரில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர் தேர்தல் விதிகளுக்கு உட்படாமல் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கட்சி பேனர் அகற்றப்பட்டது.

News April 11, 2024

ஜோலார்பேட்டையில்  பயணிகள் அவதி

image

தமிழக முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்தனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பண்டிகை நாட்களில் பஸ்கள் அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

News April 11, 2024

திருப்பத்தூர்: 5 அடி நீளம்… அலறிய தம்பதி

image

ஜோலார்பேட்டை பெரிய கம்மியம்பட்டை சேர்ந்த தேவேந்திரன் – ரம்யா தம்பதி. இவர்களது வீட்டிற்குள் விஷ பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு அலறியடித்து ஓடிய தம்பதி, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News April 10, 2024

வாணியம்பாடி: தீயில் கருகி ஆடுகள் பலி

image

வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். தான் வளர்த்து வரும் ஆடுகளை இன்று மாலை தொழுவத்தில் நாகராஜ் அடைத்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்விபத்து காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. ஆடுகளை காப்பாற்ற சென்ற நாகராஜ் தீக்காயம் ஏற்பட்டு  கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

News April 10, 2024

திருப்பத்தூர்: 107.24 செல்சியஸ் வெப்பம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில், திருப்பத்தூரில் இன்று அதிகபட்சமாக 107.24 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக 78.44 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News April 10, 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு

image

கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே 100% வாக்களிப்பது குறித்த உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஆடைகள் அணிந்து கைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்து அவர்களுடன் இணைந்து போட்டியில் பங்கேற்றார்.

News April 10, 2024

ஆம்பூர் அருகே 2 பேர் கைது

image

ஆம்பூர் தாலுகா பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் செல்போனை பறித்து சென்ற  உதியேந்தரம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (21), சந்தீப் (19) ஆகிய 2 பேரை ஆம்பூர் தாலுகா போலீசார் இன்று காலை கைது செய்து அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 3 செல் போன்களை பறிமுதல் செய்தனர். 

News April 10, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – ஆட்சியர்

image

100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் வணிக நிறுவனங்கள் ஐடி,ஐடிஸ்,பிபிஓ கடைகள், உணவு நிறுவனங்கள், பீடி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 10, 2024

திருப்பத்தூர்: விசில் தாத்தா மரணம்

image

வாணியம்பாடி அருகே வளையம்பட்டு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விசில் தாத்தா பாபு (89)
89 வயதிலும் தசைகள் தளர்ந்தாலும் , தன்னம்பிக்கை சற்றும் தளராமல், மன உறுதியோடு சுறுசுறுப்பாக வாணியம்பாடி பகுதியில் முழுவதும் மிதிவண்டியில் தனது வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

News April 9, 2024

தபால் ஓட்டும் போடும் பணி: ஆட்சியர் ஆய்வு

image

 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று அலுவலர்கள் தபால் வாக்கினை சேகரித்தனர். பின்னர், சீலிடப்பட்ட வாக்கு பெட்டியில் செலுத்தும் பணியினை இன்று ஆம்பூர் கஸ்பா புதுத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!