India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்பட்டி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் பொது பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. சக்கரத்தில் பழுது ஏற்பட்டு புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப தங்குமிடம் விளையாட்டு பயிற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் இதனை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பாலாற்று பகுதியில் குளிக்க சென்ற பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பைஜான் நீர்மூழ்கி மாயமானர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இளைஞரை தேடி வருகின்றனர். வருவாய்த்துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் இருந்து சேதமாகியது. இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்றம்பள்ளி சமையனூரை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் நேற்று அஸ்வின், அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் ஆகிய 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அஸ்வின் என்பவர் சரவணன் வீட்டின் அருகே உள்ள பெண்ணை காதலித்து வந்ததை சரவணன் பெண்ணின் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.01) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) திருப்பத்தூரில் , இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த மேல்சணாங்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் சீராக வழங்கவில்லை. பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறில் முதியவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பத் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் முதியவரின் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் முறையாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.