India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான ஜவ்வாது மலை 260 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மலையாளிகள் என்னும் பழங்குடியினர் இங்கு அதிகம் வசிக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு உள்ளன. இம்மலையிலுள்ள பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும், கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. இங்கு சோழர்கால சிவன் கோவிலும், பவ்வேறு கால நடுகற்களும் கிடைக்கப் பெற்றன
கோவை – தன்பாத் இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவையில் இருந்து ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21,28 ஆகிய தேதிகளில் புறப்படும். மறு மார்க்கத்தில் ஏப்ரல் 29,மே 6,13,20,27, ஜீன் 3,10,17,24 ஜுலை 1ம் தேதியில் புறப்படுகிறது.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் விஷ்ணு என்பவரும் பழைய ஜோலார்பேட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்ததாக ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.80 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 76.28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏப்ரல். 28ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூரை சேர்ந்தவர் ஹேமநாத். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் கட்டேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த படுகாயமடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அச்சமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் தனது அண்ணன் செல்வராஜ் உடன் அச்சமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுதேசன் என்பவர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டு பேனா கத்தியால் குத்தினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் சுதேசனை நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சாம கவுண்டனுர் வட்டம் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சிவராஜ்(56) என்பவரை பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்,3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருதுக்கு மே.1 முதல் மே.15 வரை www.sdat.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.