India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.98 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 78.62 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வருகின்ற 25 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல தயாராகி வரும் நிலையில் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி இன்று முகாமை துவக்கி வைத்தார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 329 பேர் ஹஜ் யாத்திரை பயணம் செல்வதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் திருப்பத்தூர் போலிஷ் ஸ்டேஷன் ரோடு அருண் மஹால் திருமண மண்டபத்தில் நாளை ஆசோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் மற்றும் கிராம நிர்வாகிகள், துணை அமைப்புகள் பிரிவுகள் நிர்வாகிகளும் தேசிய தோழர்களும் தவறாமல் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக மாநில பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சும்சுதீன் சலீம் (49). இவர் இன்று ரயிலில் பயணம் செய்த போது திருப்பத்தூர் அருகே திடீரென மயங்கி கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி கிராமத்தில் அமைந்துள்ள வேடியப்பன் கோயில் திருவிழா மே 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி இன்று வேடியப்பன் கோயில் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் கோயில் திருவிழா தொடங்கியது. இவ்விழாவில் பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னான் மகன் ரங்கநாதன் (55). இவர் நேற்று (மே.11) இரவு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சென்னை- பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை சிரமமின்றி சாலை விதிகளை பின்பற்றி பயணிக்குமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன மோட்டூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் நாட்டறம்பள்ளி தாசில்தார் சம்பத் வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ஜி.ஆனந்தன், கிராம நிர்வாக அலுவலர் சந்தீப் ஆகியோர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் நாளை சித்திரை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 80 சிறப்பு பேருந்துகள்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 1,74,787 குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த தொகை தங்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று அப்பகுதி பெண்கள் கூறி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.