India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் அருகே நேற்று அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று கீழ் முருங்கை பகுதியில் பலத்த காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்தது. பாலாஜி மந்திரி (72) என்பவர் இன்று காலை தனது வாழை தோட்டத்திற்கு சென்றபோது அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து தூக்கி வீசப்பட்டார். இதில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை அசாம் மாநில இளைஞர் பாவஞ்சித் உஜிர் நேற்று முன்தினம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வறுமையின் காரணமாக இளைஞரின் சடலத்தை எடுத்து செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே, இளைஞரின் சடலத்தை மாவட்ட நிர்வாகமே புதைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாணியம்பாடி அருகே அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. கோடை வெயிலில் தற்போது மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூந்நிலை நிலவியது. இதனால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு 768 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு சேர்ந்தவர் முத்துக்குமார் .இவரது மனைவி சசிகலா ஆகிய இருவருக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி சசிகலா இன்று நாட்றம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதியில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதில் மனைவி ஸ்ப்ளெண்டர் வண்டியை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏலகிரியிலுள்ள ஃபண்டேரா பார்க், பறவைகள் பூங்காவாக செயல்பட்டு வருகிறது. இங்கு 3000க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. இங்கு வரும் பார்வையாளர்கள் பறவைகளுக்கு உணவளிக்கவும், அவைகளைத் தொட்டு பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகின்றன. கூடுதலாக இங்கு பண்ணை அமைத்து கழுதைகள், பசுக்கள், முயல்கள், உடும்புகள், பன்றிகள் போன்ற விலங்குகளை பராமத்து வருகின்றனர். ஒரு பிக்னிக் ஸ்பாட்டாக இருந்து வருகின்றது இப்பூங்கா.
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர்(35). இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வளையம்பட்டு – வாணியம்பாடி ரயில் நிலையம் இடையே இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ள ஏலகிரி மலை. 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி மலை வாசஸ்தலமாகும் . மரங்கள் அழிப்பதாக ஏலகிரி மாலையிலும் 104 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.