Tirupathur

News May 8, 2024

வாணியம்பாடி: புல்லூர் தடுப்பணையில் சாமி சிலை

image

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் அப்பகுதி இளைஞர்கள் குளிக்க சென்றனர். அப்போது தடுப்பணையில் கிடந்த சாமி சிலை எடுத்து வந்த பார்த்த போது சாமி சிலை கண்விழித்து பார்த்ததாக சிலையை கூறி ஓட்டம் பிடித்தனர். அதிசய சிலை இங்கு எப்படி வந்தது என்பது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் சிலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 8, 2024

திருப்பத்தூர்: 107.98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர் இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 100.76 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 74.84டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

வாணியம்பாடி நகராட்சி சார்பில் நிழல் பந்தல்

image

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள  எல்.சி.81 ரயில்வே கேட் தினசரி 100 மேற்பட்ட ரயில்கள் செல்வதால் ரயில்வே கேட் மூடப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் பரிந்துரைப்படி நகராட்சி சார்பாக கோடைகால தற்காலிக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.

News May 8, 2024

திருப்பத்தூர் ஜலகம்பாறை அருவி

image

ஏலகிரியில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மலைகளின் நடுவில் 50 மீட்டர் உயரத்திலிருந்து அருவியாய் கொட்டும் இந்த அருவி ஏலகிரியின் அழகை மேலும் அதிகரிக்கிறது. இதிலிருந்து பல அருவிகள் பிரிந்தும் செல்கின்றனர். இந்த அருவியின் அழகை பார்க்க மழைக்காலம் மிகவும் பொருத்தமானதாகும். இதன் அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது. இந்த அருவி, சுற்றுத்தலமாகவும் ஆன்மீகத்தலமாகவும் பார்க்கப்படுகிறது.

News May 8, 2024

ஊசி வளைவில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்

image

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் சிறிய பாறைகள் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

News May 8, 2024

இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருப்பத்தூர் உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருப்பத்தூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 வரை மணி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 7, 2024

திருப்பத்தூரில் 107.96 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து கடும் வெயில் வதைத்தது. இன்று 107.96 டிகிரி வெயில் திருப்பத்தூரில் பதிவாகியுள்ளதாக பேரிடர் மற்றும் மீட்புத்துறை வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

News May 7, 2024

காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி.

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மாணவி ஒருவர் நுழைவுச்சீட்டை மறந்து விட்டு தேர்வு மையத்திற்கு வந்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவிக்கு அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கணேசன் உடனடியாக நுழைவு சீட்டை பதிவிறக்கி மாணவிக்கு தேர்வெழுத உதவி செய்தார். இச்செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் கணேசனை நேரில் அழைத்து பாராட்டினார்.

News May 7, 2024

திருப்பத்தூரில் வெப்ப அலை: எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெப்ப அலை தற்காப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், தேவை இன்றி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியிலில் வர வேண்டாம், சன் கிளாஸ் அணிய வேண்டும் , விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!